அன்பான தீபாவளி வாழ்த்துகள்
— சக்தி சக்திதாசன்.
ஒளிரும் தீப ஒளியில்
கருகும் தீய எண்ணங்கள்
மிளிரும் இந்த வேளையில்
பொழியும் ஆனந்த உணர்வுகள்
விடியும் பொழுதோடு ஒரு
வெளிச்சப் பொழுதென
மலரும் தீபாவளி அதனோடு
புலரட்டும் பொன்னான காலம்
தேசத்தின் காவலில் நின்று
நேசத்தின் வாயிலைத் திறந்து
பாசத்தின் முகத்திரை கொண்டு
வீசட்டும் வாழ்த்துகள் இன்று
இருளைக் கலைத்திடும் நேரம்
ஒளியை ஈந்திடும் காலம்
இல்லங்கள் தோறும் ஏற்றிடும்
உள்ளங்கள் மலர்ந்திடும் தீபங்கள்
கொடுமைகள் அழிந்திடவும் எங்கும்
அஹிம்சைகள் தழைத்திடவும்
புரிந்திடும் அர்த்தங்கள் கொண்டு
எரியட்டும் தீபங்கள் இன்று
இருப்பவர் உள்ளங்கள் எல்லாம்
இரக்கத்தை மனதினில் ஏற்றி
இல்லாதோர் இல்லங்கள் தோறும்
இன்பத்தை இரந்திட வேண்டும்
வளமான வாழ்க்கையைக் கண்டோர்
வழங்கட்டும் கருணையை ஒளியுடன்
வருமிந்த தீபாவளித் திருநாள்
விளம்பட்டும் பொதுநலக் கருத்தை
அன்பினிய இதயங்கள் அனைத்திற்கும்
அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்
அணையாது என்னுள்ளத்து தீபம்
அதுதானே மாறாத நேசம்
அன்புடன்
சக்தி சக்திதாசன் குடும்பம்