நாகினி

 

மன்னன் தோள் சேரும்
மணித்துளி இலாது காலம்
மலையளவு கடந்தாச்சு
மணமாலை வேறாச்சு..

காலமே கதையாகி
கானலாகிய வாழ்வில்
கண்ணீரும் வற்றிடலாச்சு
கவலைகள் விடாது சுற்றிடலாச்சு..

வரும் வரும் நிம்மதியென்று
தினம் தினம் எட்டுவைக்கும்
மனம் மனம் நிமிரும் வரம்
தரும் தரும் புதிர் காலம்..!!

.. நாகினி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *