-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

      படிபூசை செய்து உனை
      பாடி நிதம் அடியார்கள்
      அடிதொழுது நிற்கின்றோம் – ஐயப்பா         ayyappan
      எங்கள் குடிமுழுதும்
      காத்து விடு – ஐயப்பா!

      அனுதினமும் பாடி உனை
      அடிதொழுது பரவி விடும்
      அடியவரின் மனதில் உறை – ஐயப்பா
      கொடிய வினை எமையகல
      குடிமுழுதும் விடிவு பெற
      அனுதினமும் அருள் தருவாய் – ஐயப்பா!

      மடிமீது குழந்தை என
      தினமும் உனைப் பார்க்கிறோம்
      மனம் இரங்கி வந்திடுவாய் –  ஐயப்பா
      தலைமீது கால் வைத்து
      தமியேனைக் காக்க என
      சடுதியாய் வந்து விடு  – ஐயப்பா!

      தேடி உனை நாடிவர
      கூடி வரு வினையகல
      ஓடி வரு அடியவரைப் பாராயோ
       பாதமது தந்து எமைக் காவாயோ!

      மலையேறி வரு மடியார்
      மனதிலுறை எண்ண மெலாம்
      உனது நினை வல்லவோ ஐயப்பா
      உன்முமதைக் காட்டிவிடு மெய்யப்பா!

       படியேறிப் பதம் பணிந்து
       பலமுறையும் துதி பாடி
       அடிதொழுது நிற்கின்றோம் ஐயப்பா
       அருள்புரிந்து காத்துவிடு ஐயப்பா!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *