சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்கள்.

எத்தியோப்பியா நாட்டிலே ஒரு சமநிலப் பிரதேசத்திலே தோன்றிய மனித சமுதாயம் இன்று உலகைப் பல கண்டங்களாகப் பிரித்து வெவ்வேறு கலாச்சாராப் பின்னணிகளுடன் தமது வாழ்க்கையை நிலை நிறுத்தியுள்ளார்கள்.

மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் அவர்களின் வாழ்க்கை விரிவடைந்த விகிதாச்சாரமும் உலகின் காலநிலை மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நடந்தேறியுள்ளது என்பதே விஞ்ஞான உலகின் தீர்ப்பு.

இன்று உலகின் பல பாகங்களிலும் வாழும் மனிதர்கள் தமது முன்னோர்களின் ஆதிகால வாழ்க்கை முறையையும், தாம் இன்று வாழும் நிலைக்கு வந்தடைந்த பாதையின் நெளிவு சுளிவுகளையும் ஆய்ந்தறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதன் வழி உலகின் பல பாகங்களில் வாழும் பல சமுதாயங்கள் பலவகையிலான அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவ்வகையிலான அகழ்வாராய்ச்சிகளின் மூலமாகவும், பெரிய கட்டிடங்களின் அத்திவாரங்களுக்காக நிலங்களை வெட்டும் போது, தற்செயலான கண்டு பிடிப்புகளின் மூலம் மறைந்து போன பல சமுதாயங்களிற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

என்ன, எங்கே இழுத்துச் செல்கிறது சக்தியின் இந்தப் பீடிகை என்று எண்ணத் தோன்றுகிறது இல்லையா ?

சில வருடங்களுக்கு முன்னால் என் மனைவி பணிபுரியும் நிறுவனத்தின் கிளை மூடப்பட்டு பலருக்கு வேலை பறிபோனது. தெய்வாதினமாக அக்கிளையில் பணிபுரிந்தவர்களில் மிஞ்சிய இருவரில் என் மனைவியும் ஒருவரானார். ஆனால் அவரின் அலுவலகம் நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து 120 மைல்கள் தள்ளியுள்ள “ரஹ்பி (Rugby) “ எனும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

ப்ராஜெக்ட் மனேஜர் பதைவியிலிருக்கும் என் மனைவிக்கு இரண்டு நாட்கள் அலுவலகத்திலும் மீதமாயிருக்கும் மூன்று நாட்கள் இல்லத்திலிருந்து ( வாடிக்கையாளர்களை சந்திக்காத போது) பணிபுரியும் சலுகை அளிக்கப்பட்டது. ஆக என் மனைவு வாரத்தில் ஒருநாள் காலை 6 மணிக்கு கிளம்பி தனது அலுவலகம் செல்வார் அன்றைய இரவு அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கி அடுத்தநாள் காலை மறுபடி அலுவலகம் சென்று மாலையில் திரும்பி எமது இல்லம் வருவார்.

rugbyஅப்படி அவர் அங்கு செல்லும் வேளைகளில் எனக்கு அலுவலகத்தில் விடுமுறை எடுக்க வசதி இருந்தால் நானும் அவருடன் ரஹ்பி செல்வது உண்டு. அப்படி நேற்றைய முந்தினம் காலை அவர் தனது அலுவலகம் செல்லும் போது நானும் சென்றேன்.

பகலில் அவர் அலுவலகம் போனதும் நான் ஹோட்டல் அறையில் தங்கி ஓய்வெடுப்பேன். இல்லையானால் அங்குள்ள சில இடங்களைச் சென்று பார்ப்பது வழக்கம். அப்படி இம்முறை நான் சென்று பார்க்க விழைந்த இடம் ரஹ்பி நகரத்தின் நூதனசாலையாகும். அவர்களின் பொதுஜன நூலகத்துடன் சேர்ந்த வகையில் நூதனசாலையும், படக் கண்காட்சி நிலையமும் அமைந்துள்ளது.

20141125_131343[1]இந்நூதனசாலையில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் மிகவும் விசித்திரமானவை. பண்டைய காலத்தில் ஒருவருடைய நிலத்தினுள் மற்றொருவர் அனுமதியின்றி நிழைவது மிகவும் அதீதமான குற்றமாகக் கணிக்கப்பட்ட காலமது. “உத்தரவின்றி உட்பிரவேசியாதீர் ” என்னும் பாதகையத் தாங்கியிருப்பன போலும். அப்படி நுழைந்த யாரும் பிடிக்கப்பட்டால் தண்டனையாக அவர்களைப் பிணைப்பதற்கான இருப்புச் சட்டம் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

மேலும் பலவகையான காட்சிப் பொருட்கள் அதாவது 1930ம் ஆண்டு தொடங்கி 1990கள் வரை “ரஹ்பி” எனும் அந்த இடத்தில் வாழ்ந்தவர்கள் உபயோகப்படுத்திய சில பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நூதனசாலையில் அவர்கள் சேகரிக்கிம் பொருட்கள் அப்பகுதியில் வாழ்வோரிடமிருந்தே பெறப்படுகிறது. அப்படியே அக்கண்காட்சியைப் பார்த்துக் கொண்டே வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது கண்களில் ” ரால்ஸ் ராய்ஸ் ( Rolls Royce) “ எனும் பிரசித்தி பெற்ற கம்பெனியின் இயந்திரம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

640px-Tripontium_bathouse_remainsஅப்பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டு பிடிக்கப்பட்ட ரோமானிய காலச் சமுதாயத்தின் அடையாளங்கள் பல அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மிகவும் அதிசயமான முறையில் அந்நாளைய ரோமானியச் சமூகம் வெப்பௌ அறைய எப்படி நிர்மாணித்திருந்தார்கள் என்பதும் விளக்கப்பட்டிருந்தன. இந்த இடம் அன்றைய ரோமன் இங்கிலாந்தில் “ட்ரப்பொண்டியம் (Tripontium)“ என்று அழைக்கப்பட்டது.

20141125_131727[1]அது மட்டுமின்றி அன்றைய ரோமன் சமூகத்தினரின் ஆபரணங்கள், உடையமைப்புகள் என்பன பற்றியும் விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அன்றைய ரோமன் மக்களினது இறை நம்பிக்கை பற்றியும் குறிக்கப்பட்டுள்ளது. மனிதரின் அன்றாட வாழ்க்கையில் தெய்வங்களின் ஈடுபாட்டால் மற்ரங்கள் நிகழ்கின்றன என்று அன்றைய ரோமானிய சமூகம் நம்பியது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட சமூகத்தினரினது புராதனச் சின்னங்களின் கண்டுபிடிப்பு அவர்களின் வாழ்க்கை முறைகளை பற்றிய ஒரு சிறுகுறிப்பு உள்ளடங்கிய வீடியோ கண்காட்சி ஒன்று ஏறத்தாழ 4 நிமிட நேர வரையிலானது அங்கே காட்சிக்காக நிறுவப்பட்டுள்ளது.

தமது முன்னோர்கள் நாம் வாழும் இன்றைய நிலைக்கு வரும் பாதையில் சந்தித்தவைகள் எவை என்பதை தம்மால் முடிந்த அளவிற்கு பாதுகாத்து அதை அனைவரின் கண்காட்சிக்காக இலவசமாகக் கட்டணமின்றி அனுமதிலும் இந்நாட்டவரின் இக்குணாதிசயம் மிகவும் போற்றப்படக்கூடிய ஒன்று.

இப்படியான ஒரு மனப்பான்மை கொண்டவர்களால் தான் தமது நாட்டைப் பற்றிய பெருமையைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. அப்படி எம் நாட்டின் மீது நாம் பெருமை கொண்டால்தான் அதனைச் சுத்தமாக வைத்திருப்பது கொண்டு அதற்கான காரியங்களை எதுவித ஊழலுமின்றி புரியக்கூடிய மனோநிலை கிடைக்கிறது.

அப்படியாயின் நாம் எமது புராதானச் சினக்களையும், முன்னோர்களிம் சரித்திரத்தையும் எப்படிப் பேணுகிறோம் ? சிந்திக்க வைக்கும் கேள்வி இல்லையா ?

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *