கவிஞர் காவிரிமைந்தன்.

 

savithiri

 

எட்டடுக்கு மாளிகையில்… பாதகாணிக்கைக்காக கண்ணதாசன் எழுதிவைத்த காதல் காணிக்கை!

உயிர்கள் வாங்கும் உள் மூச்சும் வெளிமூச்சும் வந்துபோவது போல் – உறவுகளில் உறவும் பிரிவும் அமைவது இயல்பே! ஆயினும் பிரிவு என்று வரும்போது… மனம் பேதலிக்கிறது! தடுமாறுகிறது! நிலைமாறுகிறது!! இந்தக் கோலம் அலங்கோலம்தான்! இந்த அலங்கோலத்தில் ஒரு பெண்ணின் மனம் என்ன சொல்லி கதறும்? அழகிய சொற்கோலமாய் – கால வெள்ளத்தில் அடித்துச் செல்ல முடியாத காதல் அகராதிகளே இவை!

எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச் சென்றானடி – இன்று
வேறுபட்டு நின்றானடி

அட.. மெட்டுக்கு எழுதப்பட்ட பாடலிது என்று விட்டுவிட முடியாமல்.. கட்டிப் போடுகிறது கவிஞரின்பாணி – காலகாலமாய் நம்மிடையே நிலவிவரும் ஒரு பழமொழியைத்தான் கவிஞர் இப்பாடலில் பல்லவியாக்கியுள்ளார். அது என்ன தெரியுமா?

‘‘பெண்டாட்டியை தலைக்குமேல் வைத்து ஆடுகிறான்” என்பது நாம் வழக்கமாக கேட்டதுதான். அப்படித் தலைக்குமேல் மனைவியைக் கொண்டாடி மகிழ்ந்தவன் இன்று விட்டுவிட்டுச் சென்று விடுகிறான். இன்னும் பாருங்கள். எண் சாண் உடம்பிற்கு தலையே பிரதானம்! (எட்டடுக்கு மாளிகையில்) அந்த தலைக்கு மேல் வைத்து வாழ்ந்தவன் விலகிச் செல்கின்றபோது…

பல்லவியைத்தாண்டிச் சரணங்கள் எல்லாம் கண்ணதாசனிடம் நாம் சரணடைந்த காரணத்தைக் கூறுகின்றன!

கையளவு உள்ளம் வைத்து
கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடி – என்னை
விளையாடச் சொன்னானடி – அவனே
விளையாடி விட்டானடி

காலங்கள் உள்ளவரை
கன்னியர்கள் யார்க்கும் இந்த
காதல் வர வேண்டாமடி – எந்தன்
கோலம் வர வேண்டாமடி

பாதகாணிக்கைக்காக கண்ணதாசன் எழுதிவைத்த காதல் காணிக்கை!

http://www.youtube.com/watch?v=78QH_tPh1RY
காணொளி: http://www.youtube.com/watch?v=78QH_tPh1RY

 

பாடல்: எட்டடுக்கு மாளிகையில்
வரிகள்: கண்ணதாசன்
இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
குரல் : பி.சுசீலா
படம் : பாத காணிக்கை
திரையில்: நடிகையர் திலகம் சாவித்திரி

எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச் சென்றானடி – இன்று
வேறுபட்டு நின்றானடி – இன்று
வேறுபட்டு நின்றானடி

தேரோடும் வாழ்வில் என்று
ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி – கண்ணில்
நீரோட விட்டானடி – கண்ணில்
நீரோட விட்டானடி

கையளவு உள்ளம் வைத்து
கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடி – என்னை
விளையாடச் சொன்னானடி – அவனே
விளையாடி விட்டானடி

காலங்கள் உள்ளவரை
கன்னியர்கள் யார்க்கும் இந்த
காதல் வர வேண்டாமடி – எந்தன்
கோலம் வர வேண்டாமடி – எந்தன்
கோலம் வர வேண்டாமடி

(எட்டடுக்கு)

THREEp susheelaPaatha-Kaanikkai

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *