பாரதியார் ஜதி பல்லக்கு, பார்த்தசாரதி பெருமாள் கோயில் வாசலில், வியாழக்கிழமை டிசெம்பர் 11 காலை 9.00 மணிக்கு, அனைவரும் வருக அருளைப் பெறுக….

0

கிரேசி மோகன்

cb

அல்லிக் குளக்கரையில் ஆண்டவர் வாயிலில்
வெள்ளிக்கு முன்னே வியாழனில், -பல்லக்கை,
ஏந்துகிறோம் பாரதி, ஏறியமர் வீடடைவோம்,
தாந்திமிதோம் தாளஜ திக்கு

துட்டுக்கு ஏழை, திருவல்லிக் கேணியின்
எட்டுக்கு(கிருஷ்ணன்) தோழனவன் என்றுமே, -பிட்டுக்கு,
மண்சுமந்தோன் மைத்துனனைக் கண்சுமந்தோன் பல்லக்கு
உன்சுமந்த தோளுக்(கு) உரம்….கிரேசி மோகன்….

 

”ஜாக்கிரதை! பார்த்து! ஜதிப்பல்லாக் கில்தமிழ்
ஆக்கிர மித்தோன் அமர்ந்துள்ளார்-தூக்குற
நாமெல்லாம் ’’கண்ணனென் நண்பன்’’ எனச்சொன்னக்,
கோமானின் சீமான்தாங் கி’’….கிரேசி மோகன்….

பெருமாள் தூக்குபவர்களை ‘’சீமான் தாங்கி’’ என்பார்கள்….

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *