நாகினி

பஜனைப் பாடலை
இழுத்துப் போர்த்திக்கொண்டது
மார்கழி குளிர்..
***
வரவேற்கும் புலர்பொழுதை
வாசல் அடைத்து நிற்கும்
வண்ணக் கோலம்..
***
தெருவடைக்க சுண்ணக்கோலம்
வண்ணம் காட்டியும்
எறும்பு பசியாறவில்லை..
***
தட்டி எழுப்பியது
புலராத சூரியனை மார்கழி
பஜனைப்பாடல்..
***
கல்யாண மேடை கோலம்
தெருவை அலங்கரிக்கப் போட்டாள்
முதிர்கன்னி..

… நாகினி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *