என் மார்கழி மாதக் கவிதைகள்!
-அ.வெற்றி
மழை வேண்டாமென
மண்டியிடுகின்றன
முற்றத்தில்
*மாக்கோலங்கள்*
========
கோலத்தின் அழகை
மிஞ்சிவிட்டன
சுற்றிவந்த குழந்தையின்
*பாதச்சுவடுகள்*
==========
அவளைப்போலவே
வளைந்து நெளிந்து அழகாய்
அவளிட்ட
*சிக்குக் கோலம்*
========
காலநிலை மாற்றதிலும்
மாறாமல் பூக்கும்
மார்கழிப் பூக்கள்
*கோலங்கள்*