நாகினி

G6

போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்
போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்

மரியன்னை வயிற்றில் உதித்து
மாட்டுத் தொழுவத்தில் பிறந்த
கருணை நிறைந்த தேவனை
போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்..

பாவங்களை ரட்சிக்கும் மேய்ப்பரவர்
மாசு மன இருள் அகற்றும் தூயவரவர்
பாதம் சரணடைந்து அருள் ஒளி பெறவே
போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்..

அன்பெனும் விளக்காகி
பண்பின் வழிநடக்க பாதையாகி
கிருபைகள் நாளும் வழங்கி
புவி கிரகத்தில் வழிநடத்தும் தேவனை
போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்..

முள் முடி தரித்து
சிலுவை சுமக்க வைத்த
இருள் மனபாவிகளின் பாவங்களை
அருள் தோளில் சுமந்து
சிலுவையில் மரித்த தேவனை
போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்..

வன்ம இரும்பாணிகள் உயிரைக் குடித்தாலும்
திண்ம நம்பிக்கை ஒளிவடிவாய்
வன்மங்களைத் துண்டாட
தரணியில் உயிர்த்தெழுந்த தேவனை
போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்…!!

… நாகினி

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *