மார்கழி மலர்கள் – எண்ணமெல்லாம் வண்ணமாய் (பாடல்)

0

இசைக்கவி ரமணன்

 

[mixcloud]//https:www.mixcloud.com/Vallamai/%E0%AE%8E%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%AF/[/mixcloud]

732_radha-krishna-wallpaper-009
வண்ணமெல்லாம் கண்ணனாய்
கண்ணனெல்லாம் காதலாய்
காதலெல்லாம் ராதையாய்
ராதை அன்பு தாரையாய், அந்த
தாரையே என் கூரையாய்
கூரையின் ஓரம் குழலோசை நெஞ்சில்
கொடிவளரும் எண்ணமாய் (எண்ணமெல்லாம்)

கண்ணில் படாமலே என்னைத் தொடாமலே
நெஞ்சைக் கொள்ளை கொண்டான் நித்தமும் ஏங்கவைத்தான்
தன்னைத் தராமலே என்னை அடிமை செய்தான்
தாழ்திறந்தே என் தலைவன் எதிரில் நின்றான்
கண்ணா கண்ணா அபயம் அபயமென்றேன்
கண்ணீரின் நதியில் கனவாய்க் கரைந்துநின்றேன்
ஏழ்கடல் விழியாலே என்னடா என்றான்
ஏழைநான் வாழவே எங்கிருந்தோ வந்தான்
என் அன்பன் என் தலைவன் என் மன்னன் என் துணைவன்
என் தோழன் நண்பன் நேசன் ஈசன் என் என் என் கண்ணன்
(எண்ணமெல்லாம்)
ஒருபுறம் தேகம் ஒரு புறம் ராகம்
ஒருபுறம் ஒன்றுமில்லா வெளி வானம்
மறுபுறம் இல்லாத மன்னரின் மன்னன்
மாயைகள் வீழ்ந்திடும் நேயத்தின் நாயகன்
அன்பே கண்ணனின் ஆலயமாகும்
அவன்நினை வொன்றே ஆனந்த கீதம்
தாள்களில் தாள்களில் தஞ்சம் தஞ்சம்
தழுவிய பொழுதே தணிந்தது நெஞ்சம்
என் அன்பன் என் தலைவன் என் மன்னன் என் துணைவன்
என் தோழன் நண்பன் நேசன் ஈசன் என் என் என் கண்ணன்

(எண்ணமெல்லாம்)
23.12.2014 / செவ்வாய் / 19.15

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *