-ரா. பார்த்தசாரதி

puththandu

 

 

 

 

 

 

 

 

 

கதிரவன் குணதிசையில் பன்முகமாய்  உதித்தான்
புலரும் புத்தாண்டாய்ப் புதிதாய் உருவமெடுத்தான்!

நதியால் இணைந்த  மாநில மக்கள்
அவலம் அழிந்து போகாதோ  புத்தாண்டே!

எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல எண்ணத்துடனே
மக்களுக்கு நல்லதைச் செய்ய வேண்டும் புத்தாண்டே!

சுயநலங்கள்  சூழ்ச்சிகள்  சுவடு தெரியாமல்
அவனியில்  அழிந்து போகாதோ  புத்தாண்டே!

தீவிரவாதம் ஒடுங்கிப்போகாதோ புத்தாண்டே
வேற்றுமையில் ஒற்றுமை ஓங்காதோ புத்தாண்டே !

நாட்டுக்கு நாடு மாநிலத்திற்கு மாநிலம்  சமாதானம்  மட்டும்
தானமாய்க் கிடைக்காதோ புத்தாண்டே !

ஆட்சியும்  அதிகாரமும் ஏழையின்
ஏக்கத்தைத்  தீர்க்காதோ  புத்தாண்டே !

பூமியெங்கும் அமைதி மட்டும்
ஆட்சி   புரியாதோ  புத்தாண்டே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *