நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற – புலவர் புலமைப்பித்தன்

0

நீங்கநல்லாஇருக்கோணும் …..

தமிழக வரலாற்றில் திரைத்துறையும் அரசியலும் இரண்டறக் கலந்திருப்பதற்கு இந்த பாடலும் சாட்சி சொல்லும்! புரட்சித்தலைவர் என்கிற பொன்மனச்செம்மல் மருத்துவமனையில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த போது இந்தப்பாடல் மக்களின் பிரார்த்தனை கீதமானது! இன மதங்களைக் கடந்து எல்லோரும் ஒருமித்த குரலில் இறைவனைத் தொழுதுநின்றார்கள் என்பது ஒன்றிரண்டு அல்ல.. தமிழகமெங்கும்! திரையரங்குகளில் இந்தப்பாடல் எந்தத்திரைப்படம் அங்கே ஓடினாலும் முதலில் இப்பாடல் ஒருமுறை ஒலித்தபின்தான் என்கிற சரித்திரம் எவருக்கு வாய்த்தது.. எம்.ஜி.ஆரைத் தவிர!

நீங்கநல்லாயிருக்கோணும்நாடுமுன்னேறஇந்தtms
நாட்டில்உள்ளஏழைகளின்வாழ்வுமுன்னேற
நீங்கநல்லாயிருக்கோணும்நாடுமுன்னேறஇந்த
நாட்டில்உள்ளஏழைகளின்வாழ்வுமுன்னேற
என்றும்நல்லவங்கஎல்லாரும்ஒங்கபின்னாலேநீங்க
நெனச்சதெல்லாம்நடக்குமுங்ககண்ணுமுன்னாலே
என்றும்நல்லவங்கஎல்லாரும்ஒங்கபின்னாலேநீங்க
நெனச்சதெல்லாம்நடக்குமுங்ககண்ணுமுன்னாலே

· பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி என்று பாராட்டப்பெற்ற அவர் நடித்த இத்திரைப்படத்திற்கும் இதயக்கனி என்றே பெயரிட்ட பேறும் அண்ணா அவர்களின் குரலில் இப்படத்திற்கான முன்னுரையும் இடம்பெற்றது.

· தமிழகத்தைச் செழிப்பாக்க ஓடிவரும் காவிரி நதியின் ஒய்யார அழகை ஒரு திரைப்பாட்டில் தொகையறாவைக் கொண்டு இப்படி வர்ணிக்க முடியும் என்று புலவரின் கைவண்ணம் ஓங்கி ஒலித்திட.. காவிரியின் பெருமைகள் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடிவருவதைப் பாருங்கள்.. அதன் உச்சமாய்.. வாரி வழங்கும் வள்ளல் புகழை ஒப்பிட்டு திரையில் தோன்றிய திருமுகத்தைக் காட்டிய இயக்குனரின் சமார்த்தியம் பாராட்டத்தக்கது!

தென்னகமாம்இன்பத்திருநாட்டில்மேவியதோர்
கன்னடத்துக்குடகுமலைக்கனிவயிற்றில்கருவாகி
தலைக்காவிரிஎன்னும்தாதியிடம்உருவாகி
ஏர்வீழ்ச்சிகாணாமல்இருக்கசிவசமுத்திர
நீர்வீழ்ச்சிஎனும்பேரில்நீண்டவரலாறாய்
வண்ணம்பாடியொருவளர்த்தென்றல்தாலாட்ட
கண்ணம்பாடிஅணைகடந்துஆடுதாண்டும்காவிரிப்பேர்பெற்று
அகண்டகாவிரியாய்ப்பின்நடந்து
கல்லணையில்கொள்ளிடத்தில்காணும்இடமெல்லாம்
தாவிப்பெருகிவந்துதஞ்சைவளநாட்டைத்
தாயாகிக்காப்பவளாம்தனிக்கருணைகாவிரிபோல்
செல்லும்இடமெல்லாம்சீர்பெருக்கித்தேர்நிறுத்தி
கல்லும்கனியாகும்கருணையால்எல்லோர்க்கும்
பிள்ளையெனநாளும்பேசவந்தகண்மணியே
வள்ளலேஎங்கள்வாழ்வேஇதயக்கனி
எங்கள்இதயக்கனிஇதயக்கனி

· டி.எம்.செளந்திரராஜன்.. சீர்காழி கோவிந்தராஜன்.. எஸ்.ஜானகி மற்றும் குழுவினரின் கூட்டணியில் மெல்லிசை மன்னர் ஈன்றெடுத்த வெற்றிச்சித்திரமிது!

· உழைக்கும்தோழர்களேஒன்றுகூடுங்கள்sj
உலகம்நமதுஎன்றுசிந்துபாடுங்கள்
மேடுபள்ளம்இல்லாதசமுதாயம்காண
என்னவழிஎன்றுஎண்ணிப்பாருங்கள்
அண்ணாசொன்னவழிகண்டுநன்மைதேடுங்கள்

நீங்கநல்லாயிருக்கோணும்நாடுமுன்னேறஇந்த
நாடெங்கும்இல்லாமைஇல்லையென்றாக

சமத்துவ சமுதாய சிந்தனையை.. தன் பாட்டு வரிகளால் ஒருமிக்க.. அதற்கேற்ற காட்சியை இயக்குனர் அமைத்துத் தர ஒட்டுமொத்தமாய் எம்.ஜி.ஆருக்கு புகழை மட்டுமல்ல.. ஓட்டுக்கள் மொத்தத்தையும் அள்ளித்தந்த பாடலிது என்றுகூட சொல்லலாம்!

பாடுபட்டு்ச்சேர்த்தபொருளைக்கொடுக்கும்போதும்இன்பம்
வாடும்ஏழைமலர்ந்தமுகத்தைப்பார்க்கும்போதும்இன்பம்
பேராசையாலேவந்ததுன்பம்சுயநலத்தின்பிள்ளை
சுயநலமேஇருக்கும்நெஞ்சில்அமைதிஎன்றும்இல்லை
பேராசையாலேவந்ததுன்பம்சுயநலத்தின்பிள்ளை
சுயநலமேஇருக்கும்நெஞ்சில்அமைதிஎன்றும்இல்லை
அமைதிஎன்றும்இல்லை
காற்றும்நீரும்வானும்நெருப்பும்பொதுவில்இருக்குதுமனிதன்
காலில்பட்டபூமிமட்டும்பிரிந்துகெடக்குது
பிரித்துவைத்துப்பார்ப்பதெல்லாம்மனிதர்இதயமேஉலகில்
பிரிவுமாறிஒருமைவந்தால்அமைதிநிலவுமே .. அமைதிநிலவுமே
நதியைப்போலநாமும்நடந்துபயன்தரவேண்டும்
கடலைப்போலேவிரிந்தஇதயம்இருந்திடவேண்டும்
வானம்போலப்பிறருக்காகஅழுதிடவேண்டும்
வாழும்வாழ்க்கைஉலகில்என்றும்விளங்கிடவேண்டும்

ஒற்றைத்திரைப்பாடலில் இத்தனைக் கருத்துக்களா? விழிகள் விரிகின்றன! இதயக்கனிக்காக புலவரின் இதயம் வார்த்த வார்ப்புகளிது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *