பொங்கல் நல்வாழ்த்துக்கள்….
கிரேசி மோகன்
”எத்தைநாம் செய்தாலும் பித்தம் தெளியாது,
இத்தரை வாழ்வின் இயல்பது: -இத்தையில்,
அத்தைதன் மீசைக்கும், ஆச்சரியம் கொள்ளாதே,
சித்தத்தின் பொங்கல் சழுக்கு(குற்றம்)”….
”கங்குலைப் போக்கும் கதிரவா தைத்திங்கள்,
பொங்கலை வைத்துப் பணிகின்றோம்: -எங்களுள்,
பொங்கிடும் காமத்துப் பாலைத் தணித்திடு,
சங்கராந்தி சூர்யா சரண்”….கிரேசி மோகன்….