கவிஞர் காவிரிமைந்தன்.

 

அச்சம் என்பது மடமையடா1

 

எழுச்சிமிக்க பாடல் ஒன்றுதான் திரைப்படத்தின் துவக்கம் என்று சொன்னால் கண்முன்னே வந்து நிற்பது மன்னாதி மன்னன். நடேஷ் ஆர்ட்ஸ் பிக்சர்ஸரின் தயாரிப்பில் கவியரசு கண்ணதாசன் கதை, வசனம், பாடல்கள் என பொறுப்பேற்ற படமாகும். மக்கள் திலகம் – குதிரைகள் பூட்டப்பட்ட வாகனத்தில் பயணம் செய்தபடி பாடுகிறார்! அந்தக் குளம்படிச் சத்தம் இசையமைப்பை இயற்கையானதாக்கிட டி.எம்.செளந்திரராஜன் அவர்களின் கம்பீரக் குரலில் காலத்தை வென்றுநிற்கும் பாடல்! மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.. தமிழ் உலகம் உள்ளவரை போற்றப்படுகிறார்கள் என்பதற்கு சான்று! சேர சோழ பாண்டியர்தம் பெருமைகளைச் சொல்லி..

உணர்வைத் தட்டியெழுப்பும் உவமைகளைக் கையாண்டு.. தன்மானம் காக்கும் தனயனின் பரம்பரை நமதென முழங்கி.. வீர மரபில் விளைந்தவர்கள் நாம் என முரசுகொட்டும் பாடல்! ஓங்கி ஒலிப்பது மட்டுமின்றி ஒவ்வொரு வரியிலும் வீரத்தின் வரலாறு! திராவிடத்தின் பெருமைதனை உலகுக்குச் சொல்ல இந்த ஒரு பாடல் போதுமே!!

காலத்தை வென்றவர்கள் வரிசையிலே கண்ணதாசன், எம்.ஜி.ஆர். போன்றோர் நிற்பதைக் காண்கிறோம். அவர்கள் சராசரி வாழ்க்கையைக் கடந்து தங்கள் சாதனைகளால் புகழ்வானில் நிலைத்ததையும் அறிவோம்!

வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி..
மக்களின் மனதில் நிற்பவர் யார்..
என்கிற இப்பாடல் வரிகளுக்கு இவர்களே இலக்கணமாய்த் திகழ்கிறார்கள்.

ஆறிலும் சாவு.. நூறிலும் சாவு..
தாயகம் காப்பது கடமையடா..
இதில் ஆறிலும் சாவு.. நூறிலும் சாவு என்பது ஆறுவயதிலும் மரணம் வரலாம்! நூறு வயதிலும் மரணம்என்பதே குறிப்பென மரணத்தின் நிச்சயத் தன்மை வரையறுக்கப்பட்டிருக்கிறது!

மகாபாரதத்தில் – பாண்டவர்கள் ஐவரோடு ஆறாவதாக நின்றாலும் கர்ணனுக்கு மரணம் நிச்சயம்! கெளரவர்கள் நூறுபேரோடு நின்று போரிடினும் மரணம் நிச்சயம் என்றும் இதற்கு பொருள் கண்டபோது வியந்துபோனேன்.

பல்லவியாய் அமைந்த நான்கு வரிகளையும் குழந்தைகள் நெஞ்சில் பதித்து வையுங்கள்! நாளைய தலைமுறை வீரம், மானம் மிக்கதாய் விளங்கும் என்பதில் ஐயமில்லை..

அச்சம் என்பது மடமையடா ..
அஞ்சாமை திராவிடர் உடமையடா.. ஆ..ஆ..ஆ..
அஞ்சாமை திராவிடர் உடமையடா
அச்சம் என்பது மடமையடா ..
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா ..
அஞ்சாமை திராவிடர் உடமையடா

1999ஆம் ஆண்டு யாம் நடத்திய பாங்கான பட்டிமன்றத்தில் தருமபுரியிலிருந்து அழைத்து வரப்பட்ட 65வயது இளையவர் இப்பாடலைப் பாடியபோது.. கூடியிருந்த மக்கள் அனைவரின் இரத்த நாளங்கள் சூடாகின. நரம்புகள் முறுக்கேறின. அத்தனை அற்புதமாய் பாடிய அவரை.. பம்மல் நல்லதம்பி அவர்கள் மெச்சிப் புகழ்ந்து.. எங்களை எல்லாம் 1960களுக்கே அழைத்துச் சென்றுவிட்டீர் என்றது நினைவுக்கு வருகிறது..

எல்லாவற்றையும் விட ஒரு ரகசியம்.. புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் ஒவ்வொரு முறை காரில் பயணம் செய்யும்போதும் தவறாமல் இப்பாடல் ஒலிக்குமாம்! .. கண்ணதாசன் என்னும் காவியத்தில் இதுவும் ஒரு பக்கம்!

காணொளி: http://youtu.be/KnRLGNYrCh0

 

படம்: மன்னாதி மன்னன் (1960)
பாடல்: கண்ணதாசன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
குரல்: டி. எம். சௌந்தரராஜன்

_______________________

அச்சம் என்பது மடமையடா ..
அஞ்சாமை திராவிடர் உடமையடா.. ஆ..ஆ..ஆ..
அஞ்சாமை திராவிடர் உடமையடா
அச்சம் என்பது மடமையடா ..
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா ..
அஞ்சாமை திராவிடர் உடமையடா

கனகவிஜையரின் முடிதலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மகன்..ஆ..ஆ
கனகவிஜையரின் முடிதலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மகன்
இமய வரம்பினில் மீன் கொடியேற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே
அச்சம் என்பது மடமையடா ..
அஞ்சாமை திராவிடர் உடமையடா

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை.. ஈ..ஈ..ஆ..
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை
அச்சம் என்பது மடமையடா ..
அஞ்சாமை திராவிடர் உடமையடா

வாழ்பவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
வாழ்பவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
அச்சம் என்பது மடமையடா ..
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா ..
அஞ்சாமை திராவிடர் உடமையடா

அச்சம் என்பது மடமையடாTHREETMSஅச்சம் என்பது மடமையடா2

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *