-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

மருமகள் நீதா  னென்றார்
மனைக்கு நீ விளக்கு என்றார்
திருமகள் நீயே யென்றார்
தேடிய செல்வம் என்றார்
அருவருக் கின்றார் இன்று
அனுதினம் என்னை வை தார்!

மாமியார் இட்ட வேலை
மறுத்ததே இல்லை யானும்
பூமியில் அவரை அன்னை
போலவே கருதி வந்தேன் !
நாவினால் அவரோ நாளும்
நங்கையைத் திட்டு கின்றார்!

வீட்டிலே அன்னை தந்தை
விரும்பிய அண்ணன் தம்பி
பாட்டியோ(டு )அக்கா தங்கை
பாசத்தை விடவும் மாமி
வீட்டிலே அன்பு காட்டி
விட்டதால் மனம் தவித்தேன்!

மண்ணிலே வாழு கின்ற
மாமிமார் எல்லாம் வீணாய்
எண்ணியே மறு மகளை
ஏய்ப்பதுவும் முறை யாமோ ?
பெண்களே பெண்ணை வாட்டும்
பேரிடி என்ன நீயதி ?

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *