சொக்குதே மனம்… சுத்துதே ஜெகம்!
— கவிஞர் காவிரிமைந்தன்.
எம்.ஜி.ஆர். வைஜயந்திமாலா இணைந்து நடித்த பாக்தாத் திருடன் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடலின் பல்லவியில் நிச்சயம் ஒரு மயக்கம் உண்டு!
ஜி.கோவிந்தராஜுலு நாயுடு இசையில் கட்டுண்ட நாகம்போல் நாமும் மாறலாம்! இனிமை அதிலுண்டு! இயற்றியவர் மருதகாசி பி.சுசீலாவின் குரலில் …சொக்குதே மனம்!!
அந்தப்புர சங்கதிகளின் அடிநாதமாய் விளங்கும் பெண்மையை வைத்தே காய்கள் நகர்த்துவதும் ஒருவித ராஜதந்திரம் என்றது அந்தக்காலம்!
எந்த காலத்திலும் ஆட்சியிலிருப்பவர்களும் அதிகாரத்திலுப்பவர்களும் எளிதில் அகப்பட்டுக்கொள்வது இந்த போதையில்தானே!
திரைப்படங்களில் இந்தக் காட்சியில் பாடல் இடம்பெறுவது எழுதப்படாத விதியாகவே அன்றுமுதல் இன்றும் தொடர்கிறது!
ஆட்டம் பாட்டம் … அதற்கிடையில் கதையின் நகர்வு… இசையின் துள்ளல் நம்மைக் கிறங்க வைக்க… எழுத்தில் வடித்துவிடும் கவிஞர்களின் கற்பனா சக்தியில்… திரைக்கதை… மூலக்கதை எல்லாம் முன்மொழியப்படும்…
சொல்லப்போனால் திரைப்படத்தின் முடிவு வருவதற்கு முன் வருகின்ற பாடலாகவே இதுபோன்ற பாடல்கள் இடம்பெறும்!
திருமதி.பி.சுசீலா அவர்களின் குரலில் இந்தப் பாடல் எனக்கென்னவோ… சொல்லத் தெரியாத இன்பத்தை தந்துவிடுகிற பாடல் என்றே சொல்லத் தோன்றுகிறது!
அமர்க்களம்… அட்டகாசம்… என்பதெல்லாம் நிறைவுபெறாத வார்த்தைகள் என்றே நினைக்கிறேன்!
பூத்து குலுங்குதே புது உணர்வு காணுதே… ஏ…
காத்திருந்த என் பருவ காலமிதே… ஆ…
எதிர் பார்த்திருந்த
இன்ப நாள் வந்ததே தன்னாலே
பார்வையிலே காதல் அலை
பொங்குதே உன்னாலே…
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
கொலைகார வேடன் வலை கண்டதாலே
நிலை மாறி வந்த இள மானும் நானே
என்னாசைத் தங்கமே அஞ்சாத சிங்கமே
நீ தஞ்சமே
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
கருவண்டின் முன்னே களிப்போடு ரோஜா
கண்ணாலே பேசி செய்யுதே தமாஷா
எண்ணாதே லேசா என் காதல் பாதுஷா
ஏன் தாமதம்
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
அழகின் கஜானா உந்தன் ஜனானா
அதற்கேற்ற மைனா வந்ததே தானா
மௌனம் ஏன் வீணா திரும்பாதே போனா
ஆலம்பனா
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
படம்: பாக்தாத் திருடன்
பாடல்: மருதகாசி
இசை: ஜி.கோவிந்தராஜுலு நாயுடு
குரல்: பி.சுசீலா
எம்.ஜி.ஆருடன் டி.ஆர்.ராமச்சந்திரன் இசைகோஷ்டியாக வேடமிட…நம்பியாரை நோக்கி நாட்டியமாடுகிற நங்கையாக திருமதி. வைஜயந்திமாலா வேகம்காட்டி ஆடும் ஆட்டம் சிறப்பானது!
பலமுறை கேட்டிருந்தாலும் பாக்தாத் திருடன் பாடல்.. மறுமுறை கேட்கத்தூண்டும் அதிசயம் என்ன?
காணொளி: https://www.youtube.com/watch?v=ud8-90yS0Ks
ஜெயா தொலைக்காட்சியில் இப்பாடலின் பல்லவியை நினைவூட்டி அமைக்கப்பட்டிருக்கும் இசைநிகழ்ச்சியும் அதனை வழங்கிவரும் திருமதி.பிரியாசுப்பிரமணியன் அவர்களது குரலிலும் இந்த மையல் தொடர்வது குறிப்பிடத்தக்கது!