உள்ளம் பெருங்கோயில்!
பவள சங்கரி
பெருங்கோயிலில் மூலவரைத் தியானித்தேன்
கோபுரவாயில் செப்பியதனைத்தும் வேதங்கள்
சீவனெல்லாம் சிந்தைநிறை சிற்றம்பலம்
கள்ளப்புலனைந்தும் கனிவாய் கட்டுக்குள்
வள்ளற்பிரான் பாதம்பணிந்து நல்லாற்றலும்
நயந்துபெற்ற தோற்றமும் சொல்லாற்றலும்
வியந்துபோற்றும் புவியனைத்தும் பெறவே
தில்லையுட்கூத்தனை தினம் பணிந்தேத்துவனே!!
excellent and explicit one.