— கவிஞர் காவிரிமைந்தன். 

kaana inbam

எழுதப்பட்ட பாடலை எந்த ராகத்தில் பொருத்துவது என்று யோசித்து… அதை அடிப்படையாகக் கொண்டு வார்த்திடும் இசையமைப்பு பெரும்பாலான பழைய பாடல்களில் காணலாம். சபாஷ் மீனா திரைப்படத்திற்காக தொடுக்கப்பட்ட இப்பாடல்… காணா இன்பம் கனிந்ததேனோ… பாடியிருப்பவர்கள் திரு.மோதி மற்றும் பி.சுசீலா… பாடலை இயற்றியவர் கு.மா. பாலசுப்பிரமணியம். இசையமைத்திருக்கிறார் டி.ஜி.லிங்கப்பா.

SABASH MEENAஎண்ணிலடங்காத இன்பத்தை அள்ளித்தரும் பாடலிது! பாடல் வரிகள் தம் பங்கிற்கு பாதை வகுத்துக் கொடுக்க… பயணம்போவது இசை ஆலாபனைகள்! அதுவே இப்பாடலின் உச்சம் என்றும் சொல்லலாம்! இருவர் குரலும் அதற்கேற்றவாறு தாள லய ஜதியுடன் இணைந்து மேல்ஸ்தாயி வரை படரும் அழகு… கேட்கத்திகட்டாத பாடலாய் இதனை மாற்றியிருக்கிறது!

1958ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மாலினி மற்றும் பலர் நடித்திருக்க… இனிய கானம்… காணா இன்பம் கனிந்ததேனோ… திரைப்பாடலைக் கேட்க விருப்பமில்லாதோர்கூட இப்பாடலில் மயங்கியதும் கேட்டுக் கிறங்கியதும் உண்மைதானே!!

காணா இன்பம் கனிந்ததேனோ …
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
ஆஆஅ ஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஆஅ …

காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ …
ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ …
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன்மலரோ?
வானோர் தூவும் தேன்மலரோ?

மேகம் யாவும் பேரொலியோடு
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்குவதாலே
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ …

கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ?
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் ப்ரேமையினாலே
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆஆஆஆஆஆ
காணா இன்பம் கனிந்ததேனோ …
ஆஅஆ..ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ …
காணா இன்பம் கனிந்ததேனோ …
ஆஅஅ, ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ …
ஆஆஆஆஆஆஅஅ ஆஆஆஆஆஆஆஆஅ …
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ …

பாடல்: காணா இன்பம் கனிந்ததேனோ
திரைப்படம்: சபாஷ் மீனா (1958)
இயற்றியவர்: கு.ம. பாலசுப்பிரமணியம்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: மோதி, பி.சுசீலா
காணொளி: https://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *