கவிஞர் காவிரி மைந்தன்

தங்கப்பதக்கத்தின் மேலே..

‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காதல்ரசம் ததும்பும் கனிவான பாடல்! இதயம் தொடுகின்ற இனிய கலை காதலென்பதை இதுபோன்ற பாடல்கள் ஒவ்வொன்றும் நிரூபிக்கின்றன. அட்டியின்றி அவள் அழகை வர்ணிக்கக் காதலன் முற்படும்போது வட்டியும் முதலுமாக அவளும் திருப்பித்தரும் பேரழகு இப்பாடலெங்கும் வியாபித்திருக்கிறது. நாயகனும் நாயகியும் இணைசேர்ந்து இயற்றமிழை உச்சரிக்க நடப்பது அங்கே நாட்டியம் தமிழன்றோ? இவற்றை ஒருங்கிணைக்கும் இனிய பணியை இசைத்தமிழ் இனிதே நிறைவேற்றிட மற்றொரு வெற்றிப்பாடல் மக்களை வந்து சேர்ந்தது.

amsv

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு இப்பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! இது அவரின் பாணி என்று பாடலைக் கேட்கும்போதே சொல்லிவிடலாம்! அதே போல் இரட்டைக்குரல்கள் இணைந்தே ஒலிக்கும்..டி.எம்.செளந்திரராஜன் மற்றும் பி.சுசீலா.. ஜோடிப் பாடலுக்கு இதுபோல் எங்கே இணையான மற்றுமொரு ஜோடிக்குரல்கள்?

‘ீபட்” என்கிற இசை வார்த்தையில் சொல்வதென்றால் தலைமுறைகள் பல தாண்டி இன்றும் மக்கள் விரும்பிக் கேட்கும் பாடலாய் இதோ..

akav

தங்கப் பதக்கத்தின் மேலே ….akav1

தங்க பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ

முல்லை பூ பல்லக்கு ஆடை சுமந்து
மெல்ல தவழ்வது கண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
மின்னி மறைவது உண்டு
அழகு நடையை பழகும் சிலையை
அணைக்க வந்தேனே
இதழ்கள் பொழியும் அமுத மழையில்
மிதக்க வந்தேனே (தங்க)

பட்டாடை தொட்டாட தென்றல் துணிந்து
பக்கம் நடந்தது என்ன ?
உயிர் காதல் தலைவன் காவல் இருக்க
தொட்டு இழுத்தது என்ன ?
பனியில் நனையும் மலரின் உடலில் குளிர் எடுக்கதோ ?

ஒருவன் மடியில் மயங்கும் பொழுது சுகம் பிறக்கதோ ?

(தங்க பதக்கத்தின்) மேலே

கொத்தோடு முத்தாட வஞ்சி கொடியை
தொட்டு தொடர்ந்தது என்ன
அந்தி மாலை பொழுதில் காதல் நினைவை
கொட்டி அளப்பது என்ன ?
அந்தி மாலை பொழுதில் காதல் நினைவை
கொட்டி அளப்பது என்ன ?
ஊரும் உறவும் அறியும் வரையில்
கண்கள் மட்டோடு
மண மாலை தோளில் சூடும் நாளில்
கைகள் தொட்டாடு (தங்க)

தமிழ்க்குலப் பெண்களோடு கற்பு நெறி மாண்பை இரண்டே வரிகளில் இயம்பிடுதல் என்பது வாலி அவர்களைப் போன்ற அனுபவமிக்க கவிஞர்களால் மட்டுமே இயலும்!

மக்கள்திலகமும் கலைச்செல்வியும் திரையில் தோன்றிடும் இப்பாடல் காட்சி மக்கள் மனதிலும் இன்றும் பசுமையாக! நெஞ்சத்தை விட்டகலாப் பாடலிது என்பதற்கு காரணங்கள் ஒன்றா? இரண்டா?

https://www.youtube.com/watch?v=EECTm1VOiL0

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *