இயல்புநிலை திரும்பியது …
— தேமொழி.
(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)
மலர் கவலையுடன் வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்தாள். மது வழக்கமாக வீடு வரும் நேரம் கடந்து இருட்டவும் துவங்கி விட்டது.
ஒருவழியாக வாசல் கதவைத் திறந்தவன் சோர்வுடன், “வண்டியும் பிரேக் டவுன், செல்ஃபோனிலும் சார்ஜ் இல்லை,” என்றான்.
அவனைக் கண்டதும் நிம்மதி அடைந்திருந்தவளுக்கு உடனே கோபம் வந்தது. “அதென்ன பொறுப்பில்லாத்தனம், எங்கேயும் ஃபோனே இல்லையா, அடுத்தவங்க கவலைப் படுவாங்களேன்னு கொஞ்சமாவது கருத்து இருந்தாத்தானே?” என்று சீறினாள். இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டாள் அவள்.
படம் உதவி: http://www.scooppick.com/things-most-common-in-indian-wives/