சற்றே நினைத்துப்பாருங்கள் !
–ரா. பார்த்தசாரதி.
சற்றே நினைத்துப்பாருங்கள் !
ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்
அது சக்தியின் பிறப்பிடமாகும் !
கடவுளின் அருளை வேண்டுங்கள்
அது பக்தியின் இருப்பிடமாகும் !
தியானம் செய்ய விரும்புங்கள்
அது மனஅமைதியின் உறைவிடமாகும் !
யோகாசனங்களை செய்ய பழகுங்கள்
அது உணர்சிகளை நிலைநிறுத்தும் இடமாகும் !
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்
அது அறிவு எனும் ஊற்று தோன்றும் இடமாகும் !
உடற்பயிற்சியும், நடை பயிற்ச்சியும் தினமும் கடைபிடியுங்கள்
அது இளமையென்னும் ரகசியத்தை ரசிக்கும் இடமாகும் !
பிறருக்கு நல்லதை செய்ய நினையுங்கள்
அது உங்கள் புகழினை பரப்பும் இடமாகும் !
நாணயமாக இருக்க முயற்சி செய்யுங்கள் ,
அது உங்கள் நேர்மைக்கு இடமாகும் !
வாழ்வில் சேமிப்பை கற்றுக்கொள்ளுங்கள்
அது எதிர்காலத்தில் நம்மை தாங்கும் தூணாகும் !
சிரித்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள்
அது நோயினை நீக்கும் மருந்தாகும் !
ஆம்,
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் !
சிரிக்க தெரிந்தவனே, சிந்திக்க தெரிந்தவனாவான் !!
படம் உதவி:
http://idiva.com/opinion-relationships/why-smart-people-practice-positive-thinking/28852