சற்றே நினைத்துப்பாருங்கள் !

0

–ரா. பார்த்தசாரதி.

 

சற்றே  நினைத்துப்பாருங்கள்  !

why_you_must_think_positive

 

ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்
அது சக்தியின் பிறப்பிடமாகும் !

கடவுளின் அருளை வேண்டுங்கள்
அது பக்தியின் இருப்பிடமாகும் !

தியானம் செய்ய விரும்புங்கள்
அது மனஅமைதியின் உறைவிடமாகும் !

யோகாசனங்களை செய்ய பழகுங்கள்
அது உணர்சிகளை நிலைநிறுத்தும் இடமாகும் !

நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்
அது அறிவு எனும் ஊற்று தோன்றும் இடமாகும் !

உடற்பயிற்சியும், நடை பயிற்ச்சியும் தினமும் கடைபிடியுங்கள்
அது இளமையென்னும் ரகசியத்தை ரசிக்கும் இடமாகும் !

பிறருக்கு நல்லதை செய்ய நினையுங்கள்
அது உங்கள் புகழினை பரப்பும் இடமாகும் !

நாணயமாக இருக்க முயற்சி செய்யுங்கள் ,
அது உங்கள் நேர்மைக்கு இடமாகும் !

வாழ்வில் சேமிப்பை கற்றுக்கொள்ளுங்கள்
அது எதிர்காலத்தில் நம்மை தாங்கும் தூணாகும் !

சிரித்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள்
அது நோயினை நீக்கும் மருந்தாகும் !

ஆம்,
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் !
சிரிக்க தெரிந்தவனே, சிந்திக்க தெரிந்தவனாவான் !!

 
 
 
 
 
 

படம் உதவி:
http://idiva.com/opinion-relationships/why-smart-people-practice-positive-thinking/28852

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *