திருமலை தெய்வம்!
-ரா.பார்த்தசாரதி
திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம் !
தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம் !
வரும்துயர் பகையையும் போக்கிடும் தெய்வம்!
வாய்திறந்து கேட்டாலே வழங்கிடும் தெய்வம் !
தாயாரைத் தரிசித்து வேங்கடவனைத் தரிசிப்போம் !
தரணியில் யாவரும் நலம்பெற யாசிப்போம் !
மனிதனைப் புனிதம் ஆக்குவது தெய்வ தரிசனம் !
மனதில் சலனம் போக்குவது தெய்வ தரிசனம் !
திருமலைவாசா என்று அழைத்தாலே குறைதீர்க்கும் தெய்வம் !
தினமும் நினைத்தாலே நல்வழி காட்டும் தெய்வம் !
கோவிந்தா கோவிந்தா என்றாலே பரவசம் !
கோவிந்தன் அருளும் கிடைத்திடுமே நம்வசம் !
என்றும் நினைப்போம் பணிவோம் அவன்தாள் !
எல்லார்க்கும் உகந்த தெய்வம் திருமலை தெய்வம் !