-ரா.பார்த்தசாரதி

திருவருள்  தரும்  தெய்வம்  திருமலை தெய்வம் !
தீராத  வினை எல்லாம் தீர்த்திடும்  தெய்வம் !

வரும்துயர் பகையையும் போக்கிடும் தெய்வம்!         balaji
வாய்திறந்து கேட்டாலே வழங்கிடும் தெய்வம் !

தாயாரைத்  தரிசித்து  வேங்கடவனைத் தரிசிப்போம் !
தரணியில்  யாவரும் நலம்பெற  யாசிப்போம் !

மனிதனைப்  புனிதம்  ஆக்குவது தெய்வ தரிசனம் !
மனதில்  சலனம்  போக்குவது தெய்வ தரிசனம் !

திருமலைவாசா  என்று அழைத்தாலே  குறைதீர்க்கும் தெய்வம் !
தினமும்  நினைத்தாலே நல்வழி காட்டும் தெய்வம் !

கோவிந்தா கோவிந்தா என்றாலே பரவசம் !
கோவிந்தன்  அருளும் கிடைத்திடுமே  நம்வசம் !

என்றும் நினைப்போம் பணிவோம் அவன்தாள் !
எல்லார்க்கும் உகந்த தெய்வம்  திருமலை தெய்வம் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *