ஆர்.எஸ் கலா.

IMG_148177015739141

வாணி… கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளை
கூடி விளையாடுவதோ ஏழை வீட்டு பசங்களுடன்
அதட்டிப் பார்த்தார் தந்தை பரமசிவம்
அடித்துப்பார்த்தாள் தாய் பாக்கியம்
தன் மகள் மாறவில்லை பிடிவாதம்
கொண்ட சிறுமி அவள்.

சரி விட்டு விடுவோம் வளர்ந்ததும் ஏழை பணம்
என்ற வேற்றுமை அறிந்து நிறுத்தி விடுவாள்
என்று முடிவு செய்த பெற்றோர் மௌனம்
காத்தனர். ஆனால் வாணி மாற வில்லை.
அவள் வளர்வது போல் அவள் பரிவும்
பாசமும் ஏழைகள் மேல் வளர்ந்தே வந்தன.

பகட்டு வாழ்வை வெறுத்தாள்
நாகரீக உடையை நிராகரித்தாள்
சமுதாய சிந்தனையில் தினமும் முழ்கிப் போனாள்
நாகரீக உச்சியில் நின்று ஆடும்
பெற்றோருக்கு ஏமாற்றம் அதிகம்தான்
மிஞ்சியது.

பல தரப்பட்ட பட்டப் படிப்புக்களைப்
படிக்கச் சொல்லி அவர்கள் கேட்டுக் கொண்டும்
வாணி அதை ஏற்றுக் கொள்ளாது தமிழ்
ஆசிரியராக வர வேண்டும் என்னும் இலட்சியத்தில்
படித்து இறுதி ஆண்டு பரீட்சையும் எழுதி விட்டாள்
தற்போது வீட்டிலேயே இருந்தாள் பரீட்சை
முடிவு வரும் வரை.

பெற்றோர் ஏதேதோ நாட்டின்
பெயர்களை கூறி அழைத்தனர்
அழகை ரசிக்க வரும் படி அதை எல்லாம்
மறுத்து விட்டு தன் தோழியுடன் பேசி
ஒரு முடிவுக்கு வந்தாள். தான் வீட்டில்
இருக்கும் வரை அந்த நாளை ஒரு
நல்ல முறையில் கழிக்க விரும்பிய வாணி
தன் தோழி ராணியிடம் கேட்டாள்.

நீயும் நானும் மண்டபம் சென்று அங்கே உள்ள
இலங்கை அகதிகளின் மழலைகளுக்கு
பாடம் கற்றுக் கொடுப்போமா தங்கும்
விடுதியில் தங்கி, செலவுகள் அத்தனையும்
என்னுடையது என்றாள். ராணி ஏழை வீட்டுப்பிள்ளை
ஆனால் அறிவாளி அவளும் ஒப்புக்
கொண்டாள்.

இருவரும் புறப்பட்டனர் வாணியின்
பெற்றோர் பாரட்ட மனம் இன்றி முறைத்தனர்
கண்டு கொள்ள வில்லை சென்று விட்டாள் வாணி
மண்டபத்தை அடைந்ததும் அங்கே உள்ள அகதிகளின்
பார்வை பல கேள்விகளை எழுப்பியது அவர்கள்
இருவரும் தங்களை அறிமுகம் செய்ததும் சில
பெற்றோர் கண்ணீர் சிந்திய படியே நன்றி கூறினர்.

தங்கள் பிள்ளைகளும் நாலு எழுத்து கற்றுக்
கொள்ளப்போவதை எண்ணி.
ராணி வாணி இருவரின் இதயமும் கனத்தன
அன்று முதல் ஆசிரியர்களானார்கள்
அகதி மழலைகளுக்கு கண் மூடி திறப்பதுக்குள்
மூன்று மாதம் ஓடி மறையவே விடை பெற வேண்டிய
கட்டாயம் .

மழலைகளின் அன்பில் நனைந்த அவர்களின்
கண்களும் கலங்கின அகதிகளின் அன்பையும்
கண்டு பெருமிதம் கொண்ட வண்ணம் வீட்டை
வந்து அடைந்தார்கள். வீட்டில் பல உறவுகள்
இருப்பதைப் பார்த்து முகம் மலர்ந்தாள்
அவர்கள் ஆங்கில மொழியில் நலம்
விசாரித்தனர் வாணி அழகாய் தமிழ்
மொழியில் வணக்கம் நான் நலம் என்றாள்.

உறவுகளின் முகம் சற்று மாறியது வாணியின்
பெற்றோர் சமாதானம் செய்தனர் அவள் அப்படித்தான்
தமிழ் பற்று அதிகம் என்றனர் இவைகளை கண்டு
கொள்ளாமலே தன் அறையின் உள்ளே நுழைந்த
வாணி தன் மடி கணினியைத் தட்டுகிறாள்
அரசு பாடசாலைக்கு தமிழ் ஆசிரியர் விண்ணப்பம்
கொடுக்க தயாரானாள், அவள் மாறமாட்டாள்
அவள் அப்படித்தான் வாழ்க்கை எல்லை வரை
இருப்பாள் இது உறுதி…!

கவிக்குயில் ஆர் எஸ் கலா
மலேசியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *