-ரா. பார்த்தசாரதி

அந்தமானின்  அழகே  அழகு அதன் இயற்கை அழகைப் பருகு
தென்னையும், கமுகும் ஒன்றோடுஒன்று கைகோர்த்து நிற்கும்
கடலின் நடுவே நிற்கும் தீவாய்  நமக்குக் காட்சி  அளிக்கும்
மனிதனின்   மனஅமைதிக்கு ஓர் உறைவிடமாய் இருக்கும்!   andaman

வெள்ளி அலை மேலே  துள்ளி விளையாடும் கயல்கள்
கடல் அடியில் சென்று  கடல் இனங்களைக் காணும் மக்கள்
நீச்சல் தெரியாதவன் கூடக் கடல் அடியில் நடை போடுகிறான்
அங்கே தன்னைச் சுற்றி வரும் மீன்களைக் கண்டு களிக்கின்றான்!

சிறு படகும் இயந்திரப் படகும் பயணிக்கும் மக்கள்  கூட்டம்
மனிதனுக்கு இயற்கை அழகை  மகிழ்வுடன் காண ஓர்  நாட்டம்
கடலோரக் கவிதைகள் எழுத  மனிதனுக்கோர்  கண்ணோட்டம்
காண்பதைக் கவிதை ஆக்குவதே  கவிஞனுக்குக் கொண்டாட்டம்!

அந்தமான்  சிறையில் நமது தியாகிகள் பட்ட துன்பம்
இதனைப் பொருட்காட்சியாக அமைத்த  விதம்
சுதந்திரத்திற்காக அவர்கள்  சிந்திய ரத்தமும், தியாகமும்
இன்று அதனை நினைக்காவிட்டால் நம் மனம் கலக்கமுறும்!

சுற்றுலாப்  பயணிகள் கடற்கரையினைக் கண்டு களிக்கும் தீவு
இரு தீவானாலும் ஒன்றில் பழங்குடியினர் வாழும் தீவு
தேசத் தியாகிகள் பட்ட துன்பங்களைச் சித்தரிக்கும் தீவு
நாட்டைவிட்டுத் தள்ளி இருப்பினும் தனித்தன்மை கொண்ட தீவு!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *