முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே …

0

–கவிஞர் காவிரிமைந்தன்.

aahaa1

aahaaவாலிபக்கவிஞர் வாலி அவர்களின் வசந்த வரிகளில் இதோ மற்றுமொரு பாடல்! திரைப்படத்தின் பெயர் கூட “ஆஹா” என்கிறது! இப்பாடலைத்தான் சொல்கிறதோ? இசையமைப்பாளர் தேவா அவர்களின் ரம்மியமான இசையில் இளம்பாடகர் ஹரிகரன் குரலில் ஒலிக்கும் காதல் பாடல்!

இளம் உள்ளத்தின் பருவ வாசலில் தோன்றும் அத்தனை உணர்ச்சிகளையும் ஒட்டுமொத்தமாக கவிஞனால் மட்டும் அப்படியே படம்பிடித்துக்காட்ட முடிகிறது! காவியக்கவிஞருக்கு அது கைவந்த கலையாக!

பாடலின் தொடக்கம் முதல் தொய்வில்லாத ஒரு உந்துதல்… மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது பாருங்கள்… கேளுங்கள்! ஆனந்தம் அலைமோதும் எண்ணங்களில் வார்த்தைகள் வந்துவிழாதா என்ன? சுவையான கீதம் நம்மை இனிமையான சூழலுக்கு அழைத்துச் செல்வதும்… மதுரமான இசையில் ஆழ்த்துவதும் சராசரி பாடலுக்கே சாத்தியப்படும்போது… வார்த்தைகளை கவிஞர் சர்க்கரை, தேன்பாகு போல் கொட்டிக்கவிழ்த்திருக்கும் இப்பாடல் ஈர்க்கமாலிருக்குமா?

ஆழ்ந்த சிந்தனையிலிருந்து அற்புத வரிகள் தோன்ற பாய்ந்துவரும் வெள்ளமென பாடல் பிறக்கிறது… எளிமையெனும் ரதமேறி குரல்வழியே நாம் அந்தக் குதூகலத்தை அடையலாம்..

நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே!

நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

இவை என்ன காதலுக்கு எழுதிவைக்கப்பட்டிருக்கும் வேதவரிகளா?

 

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா?
(முதன் முதலில்…)

நந்தவனம் இதோ இங்கேதான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே
உயிர் வாழுமே
(முதன் முதலில்…)

உத்தரவே இன்றி உள்ளே வா
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்
வேறெங்கு போனது பாரடி உன்னில்
உன்னைக் கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்
உன்னைக் கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்
என் சுவாசக் காற்றில் எல்லாம்
உன் ஞாபகம் உன் ஞாபகம்
(முதன் முதலில்…)
____________________________________________
படம்: ஆஹா (1998)
பாடல்: வாலி
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
காணொளி: https://www.youtube.com/watch?v=OqC-Y9YGNxE&spfreload=10

 

 

https://youtu.be/XCggs6WA9Nk

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *