-ஆர். எஸ். கலா

ஈழம் என்னும் பெயர் கேட்டதுமே,
உலக மக்கள் தலை வணங்குகின்றனர்
சில மக்கள் உடல் நடுங்குகின்றனர்
இள இரத்தங்கள் வெகுண்டு எழுகின்றனர்
இத்தனை மாற்றங்கள்  ஏன்? ஏன்?

இனம் மதம்   மொழி வேற்றுமை என்னும்,
விஷக்கிருமி ஈழத்தை இறுக்கப் பிடித்தமையால்    Srilanka
வடித்துப் பிடிக்க இயலவில்லை ஏற்பட்டது
இந்த மாற்றம்!

கட்டியவன் உதை அடி கொடுக்கும் போதும்,
கண்ணைக் கசக்கியபடியே அழுது இருக்கும்
பெண்ணையே ஈன்றவளையும் மறந்து,
ஈழத்துக்காகத்  துணிந்து துப்பாக்கி ஏந்த வைத்தது,
இன வெறி என்ற நோய்  உருவாகிய பின்னரே!

இரத்தத்தில் வேற்றுமை இல்லை அனைவருக்கும்
செந்நிறமே!
நம் கரந்தான்  நமக்குத் துணை  இந்நிலையில்
ஏனோ  வேற்றுமையை  வளர்த்து ஒற்றுமையைக்
கெடுக்கின்றாய் மானிடனே!

பட்டதும்  போதும்  விட்டதும் போதும்
இன்னும்பல புதை குழிகள் தோண்ட வேண்டாமே!
திட்டம் தீட்டும் குள்ள நரிகளின் கட்டத்தில்,
சிக்கவேண்டாமே  வட்டமிடும் பருந்தை  விட்டு விலகு!

சஞ்சலங்கள் சங்கடங்கள் எல்லாம் சத்தம்
இன்றித் தகர்த்தெறிந்து  முக்கடலின்,
சங்கமம் போல் மும்மொழியும் மதமும்,
ஒன்றாக இணைந்து வங்கக் கடலின் ஆழம்
போல் அன்புக் கடலை வளர்த்து  நம்
தங்கத்தமிழ் மங்காமல் இருக்க வழிவகுத்து,
ஈழம் அது  தமிழ்  வீடாக
என் நாடு என்ற
சொல்லை விடுத்து நம்நாடு என்று போற்ற வேண்டும்!

ஈழத்தின்  மண் சுமக்கும் மக்கள் அனைவரும் நிமிந்து
நின்று இரத்தம் சிந்தாமல் உயிர்ப்பலி கொடுக்காமல்,
ஈழம்  வளம் அடைய வேண்டும் அழகு பெற வேண்டும்
என்று  எல்லோர் கரமும் இணைய வேண்டும்!

உலக நாடும்  புகழ வேண்டும்,  பல வலைத்தளங்கள்
வழியாகவே   ஓங்க வேண்டும் தமிழ் நிலைக்கவேண்டும்
ஈழத்தின் புகழ்!

இந்து சமுத்திரத்தின் நித்திலம்
என்று நெத்தியில் பொட்டுப் போல்
நினைவில் நிறுத்திடும் நாடாம்
சிறு மாங்காய் போல் வடிவம்
கொடுக்கும்  ஈழமது  எங்கள்
உயிராம்!

நான்கு பக்கங்களும் கடலாலும்
கங்கை நதியாலும் நீர் உரு எடுத்துக்
காவல் காக்கும் நாடாம் ஈழம் அது!

அதன் அழகைக் கண்டு
அங்கீகரித்துத் தமிழால் சூட்டப்பட்ட
அழகிய பெயராம் இலங்கைத் தீவு!

நடை பாதையிலே இடை இடையே
சீறி வரும் நீருக்குத் தடையாகப் பாலம்
அந்த அழகுக் கோலம் காண
வேண்டுமாயின்  நீயும் வர வேண்டும்
ஊர்கோலம் ஈழம் வரவேற்கக்
காத்திருக்கு எந்நாளும்!

உடலை வருத்தி உழைக்கும் ஏழை
உழைப்பாளிகளின் வெள்ளைச்
சிரிப்பும் சூப்புக் கடை முதலாளிகளின்
ஆனந்தச் சிரிப்பும் காண வேண்டுமா
மாலை நேரம் சாலை ஓரம் தவறாமல்
நீர் வாரும்!

உயர்ந்த மலையிலே பணிந்த கோவிலும்
பரந்த மணல் பரப்பிலே சிறந்த பள்ளி வாசலும்
அமைதியை நாடும் கிருஸ்தவ ஆலயங்களும்
அருக அருகே  புத்த மதத்தவரின் கட்டிடங்களும்
காண வாருங்கள், ஈழத்தின் பத்தியின்
பரவசமான மனிதநேயத்தை!

ஈழத்தின் அழகை வர்ணிக்கஇன்னும்
பிறக்க வேண்டும் பல தமிழ்ப் புலவர்கள்
தமிழில் உரைக்க ஆரம்பித்தால் நீ
நீர் அருந்த மறந்து ரசித்திருப்பாய்
அதில் வல்லமை பெற்ற திறமையான
கவிஞர்களைச் சுமந்திருக்கும் நாடு அது ஈழம்!

வீழ்ந்தாலும் எழுந்து விடும் உறுதி
பூண்டு வாழும் மனம் கொண்ட
தமிழன் வாழும் அழகிய நாடாம்
ஈழம்!

எளியோரையும் வலியோரையும்
செழுமையாகவே சேர்த்து
இணைத்து வாழ வழி தேடும்
தமிழன் வாழும்  நாடாம் எங்கள் ஈழம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *