–கவிஞர் காவிரிமைந்தன்.

 

thenmadurai_vaigai_nathi
வற்றாத ஜீவநதியாய் கவிதை … வெள்ளம் போலவே கரைபுரண்டு பாய்ந்து வருகின்ற உள்ளம் கவிஞர் வாலியிடம் தஞ்சம் எனும்போது வார்த்தைகளுக்கா பஞ்சம்? தர்மத்தின் தலைவன் திரைப்படத்திற்காக கவிதை ஒன்று கருவெள்ளம்கொண்டபோது … உயிர் கொண்ட பாட்டு இது! இராகதேவன் இளையராஜாவின் இசையாட்சியில் இதோ வார்த்தை நந்தவனம் பூத்துக் குலுங்குகிறது!

வசந்த விழா ஒன்று நடந்து முடிகிறது! மெல்லிய கானம் பிறந்து வருகிறது! நல் உறவுகள் அன்பினிலே பின்னப்பின்ன ஆனந்த லயத்திலே மூழ்கவைக்கும் பாடல்! முத்தமிழை முறையாக கற்றுத் தேர்ந்த கவிஞர் வாலியின் கரம்பட்டக் காரணத்தால் கன்னித்தமிழ்க் கவிதை பிறந்ததடி! இன்பமது பொங்கி வழியும் இதமான பாடல் வளர்ந்ததடி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, சுகாசினி கூட்டணியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் பி.சுசீலா குரல்களில் தவழ்ந்து வரும் தென்றலிது!

 

 

காணொளி: https://youtu.be/5dDTrxGzs2c

படம்: தர்மத்தின் தலைவன்
பாடல்: வாலி
இசை: இளையராஜா
குரல்: எஸ். பி. பாலசுப்ரமணியம், பி.சுசீலா

__________________________________ 

தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தேய்கின்றது
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்
தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி

நம்மைப் போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை எண்ணும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை
தம்பி உந்தன் உள்ளம் தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
கண்ணோடுதான் உன் வண்ணம்
நெஞ்சோடுதான் உன் எண்ணம்
முன்னேறு நீ மேன்மேலும்
என்னாசைகள் கை கூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி

நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ண தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் இன்று
பூவைச் சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னைக் கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே
உன்னோடுதான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீதானம்மா என் தாரம்
மாறாதம்மா எந்நாளும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தேய்கின்றது
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்
தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *