மலை போலே சுமை மனதில் நிழலாடுது மரணவாசல் வரை

0

ஆர் எஸ் கலா

 

aaa
<><><><><>><><><>><><><<>><><>>>>>>>>>><>><>>>>>>>>><>>>>>><

மலை போலே சுமை மனதில் நிழலாடுது மரணவாசல் வரை
<><><><><>><><><>><><><<>><><>>>>>>>>>><>><>>>>>>>>><>>>>>><

                                {1}
குமாரின் வாழ்கை  வரலாற்றை
நினைக்கையிலே குளமாக
வருகின்றது கண்ணீர் என்
கண்களிலும்.  ஆமாம் ஒரு
கன்னியமிக்க கருணை
நிறைந்த மனிதன் குமார்.
அவனுக்கு என்று உருவான
குடும்பமோ ஒரு குருவிக் கூட்டம்
போல் அழகான குடும்பம்.
குமார் திருமணம் செய்யும் போது
சுமார் முப்பது வயது இருக்கும்.
அவன் மனைவி பெயர் வாணி
சிறுவயதிலே  தந்தையை
இழந்த ஒரு ஏழை வீட்டுப் பெண்.
ஆனால் அழகிலும் அறிவிலும்
அவளுக்கு நிகர் அவள்தான்.
குமார் படிப்பறிவு இல்லாத
இளைஞன்  விவசாயத்தில்
பல சாதணை புரிந்த  ஆண்
மகன். தாய்க்குத் தலை மகன்
ஓரளவு வசதியான குடும்பம்.
வாணியும் குமாரும் முல்லைத்தீவைப்  பிறப்பிடமாகக்
கொண்டவர்கள். பெற்றோர்
ஆசைப் படியே குமார் கை பிடித்தான்
வாணியை. ஊரார் மத்தியில்
முறையுடன். அழகான வாழ்வை
அனுபவிக்க அவனும் தயாரானான்.
வாரங்கள் மாதங்களாக மறைந்தது
ஓராண்டை நெருங்கியது.
வாணியும் தன் இல்லற இன்பத்தின்
பரிசாக ஈன்று எடுத்தாள் அழகான
ஆண் பிள்ளையை. குமாரின் மனம்
மகிழ்ச்சியில் கூத்தாடியது. தன் மகனுக்கு
அழகான பெயராக தெரிவு செய்து
சூட்ட ஆசைப்பட்டவன் மனைவி வாணியிடம்
விருப்பம் கேட்டான் அவள் தன் கணவன்
பெயருடன் சேர்த்தாப் போல்  வையுங்கள்
என்றாள்  இதன் இடையே குமாரின்
பெற்றோர் பேரனுக்கு ஜாதக முறைப்படி
சில எழுத்துக்கள் கூறவே அதில் ஓர்
எழுத்தை தெரிவு செய்து முகுந்தன்
என்று பேர் சூட்டினான் அன்று முதல்
தன் மகனுக்கு  தமிழின் பெருமையையும்
தமிழ் மண்ணின் கடமையையும் பலரின்
தியாகங்களையும் கூறியே வளர்த்து
வந்தான் முகுந்தனும் சுட்டிப்பையனாக
வளர்ந்தான் ஒரு வாட்டி கூறினாலே
கற்பூரம் போல் பிடித்துவிடுவான்
படிப்பிலும் சரி பொது அறிவிலும்
சரி நல்ல முன்னேற்றம்  முகுந்தனுக்கு
ஆறு வயது கடந்த பின்னர்தான் வாணி
மறு குழந்தைக்கு தாயானாள் இந்தத்
தடவை  அழகிய குட்டித் தேவதையை
பெற்றுக் கொடுத்தாள் குமார் கரங்களிலே
குமார் தன் அன்பு மகளுக்கு குமுதினி என்று
பெயர் சூட்டினான்  வாணியும் குமாரும்
சேர்ந்து பேசி முடிவு செய்தனர் இரு
குழந்தை போதும் என்று முடிவு எடுத்தனர்
இருவரையும் அன்பும் அக்கறையும்
அதனுடன் கொஞ்சம் கண்டிப்பும் காட்டியே
வளர்த்து வந்தனர் நான்கு பேர்
கொண்ட குட்டிக் குடும்பமாக வலம்
வந்தது குமாரின் குடும்பம்.
  

                         {2}

அந்த அழகு குடும்பத்திலே
கல்லடி பட்டது போல் பட்டது
கொடும் பாவிகள் விட்ட செல் அடி.
விழுந்து நொறுங்கிய செல் பாகங்களுக்குப்
பலியானது குமாரின்  ஒரு காலும் அவன்
வியர்வை சிந்திய உழைப்பில் கட்டிய
மனையும். அப்போதும்  தன் குடும்பம்
நலமாக உயிர் தப்பியதைப் பார்த்து
சந்தோசம் அடைந்தான் குமார் கால்
இழந்தானே தவிர தைரியத்தையும்
மன உறுதியையும் இழக்க வில்லை.
தமிழனுக்கான கர்வமும் அவனிடம்
நிறைந்தே இருந்தது தாய்க்கு நிகராக
அவன் வாழும் தாய் மண்ணை அதிகம்
நேசிப்பவன். தன் மகனுக்கு விடுதலைப்
போராளிகளின் கொள்கையைச் சொல்லியே
தூங்க வைப்பான் சிறு  வயதில்   நீயும்
நாடுகாப்பாயா என்று விளையாட்டாகக்
கேட்பான் மகனும் தலையை ஆட்டி வைப்பான்
அது போன்றே அவன் பாடசாலை விட்டு வீடு
திரும்பியதும் அருகில் இருக்கும் பயிற்சி
முகாமுக்குப் போய் நின்று வேடிக்கை
பார்ப்பான்  அப்போதே தன்னை ஒரு
போராளியாக நினைக்கத் தொடங்கினான்
முகுந்தன் பருவ வயதை அடைந்ததுமே
இணைந்து கொண்டான் போராளி குடும்பத்தில்
தந்தை குமார் கலங்க வில்லை தாய் வாணிதான்
கொஞ்சம் கலங்கிப் போனாள். ஒரே ஒரு ஆண்
மகன்.உடல் நலம் இல்லாத தந்தை பருவ  வயதை
அடைந்த தங்கை  வீட்டுப் பொறுப்பை விட்டு
நாட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டானே
என்று அவள் கலங்கவில்லை  தன் மகன்
வீரனாக வலம் வரவேண்டும் நாட்டுக்கு
பல நன்மை புரியவேண்டும் அதற்கு அவன்
நெடும் நாள் வாழவேண்டும் தன் மூச்சை நிறுத்தும்
வரை மகன் நலமக இருந்தால் போதும்
என்று தான் கண் கலங்கினாள். ஆண்டுகள்
உருண்டு ஓடியது குமார் வாணி இருவரையும்
மெது மெதுவாக  முதுமை நெருங்கியது
குமுதினியோ வீட்டுக்கு செல்லப்பாப்பாவாக
வளர்ந்து வந்தாள் தாய் தந்தையரின் அன்பில்
துவண்டு  போனாள் ஒரு மழலைபோல்.
வீட்டுக்குச் செல்லம் ஊரிலோ அவள் ஒரு
தமிழ் ஆசிரியை அழகு ஓவியம் போல்
கொடி இடையாள் கொடிக்கும் அவளுக்கும்
உள்ள வேறுபாடு கொடி வளைந்து கொடுக்கும்
இவளோ இடை மேல் கரம் பட்டாலே வசமாய்
கொடுப்பாள். கன்னத்தில். பட்டாம் பூச்சி  போல் இறக்கை
இன்றிப் பறக்கும் பெட்டைப்பூச்சி அவள்.

{3}
அவளின் நல்ல குணம் பன்பும் அழகு
பொது நலம் பெற்ரோரிடம் வைத்துள்ள
பாசம்  மரியாதை  இவைகளைப்  பார்த்து
பலர் தன் வீட்டுக்கே மருமகளாக்கி விட
ஆசைப்பட்டனர்  அதில் சிலர் வீட்டுக்குத்
தகவலும் சொல்லி அனுப்பி இருந்தனர்
குமாரும் வாணியும் தன் மகளின்
வாழ்க்கை பற்றி பேசும் போது மகன்
குமுதனை நினைத்து ஏங்குவது வழமை
அன்றும் அப்படியே பேசிக் கொண்டு
இருக்கும் போது குமுதினி கூறினாள்
அம்மா நாளை மறு நாள் அண்ணா
வரு நாள் என்று  ஆமாம் அதை நான்
மறப்பேனா என்றாள் தாய் வாணி
முகுந்தன் மாதம் ஒரு தடவை தவறாது
பெற்றோரைக் காண வருவான்  இரு
தினங்களில்  தன் மகன் வரவை
எதிர்பார்த்து விதம் விதமாகச் சமைத்தாள்
வாணி  காடு மேடு என்று போவதால் நல்ல
உணவு உண்டு எத்தனை வாரங்களோ என்று
மனதில் நினைத்தபடி கலங்கும் கண்ணைத்
துடைத்துக் கொண்டே பார்த்துப் பார்தது
சமைத்து முடித்தாள்   குடும்பமே வழி
பார்த்த  வண்ணம் இருக்க முகுந்தன்
தன் சக தோழனுடன் ஓர் வாகனத்தில்
வந்தான் நடையோ ஒரு கம்பீரமாக இருக்க
தோள் மீதும் பக்க வாட்டிலும் ஆயுதங்கள்
கண்டதும் ஒரே  சந்தோசம் தாய்க்கு  தந்தை
அவன் பதவி அவன் வீரம் கூடவே துணைக்கு
ஆள் இவைகளைக் கண்டு ஒரு வியப்பும்
பெருமிதமும் கொண்ட மகிழ்ச்சியோடு  மகனை
வரவேற்றனர் மகனாக இருந்தாலும் அவன்
ஒரு நாட்டைக்  காக்கும் வீரன் அதனால்
தன்னை அறியாமலே மரியாதையும்
கொடுப்பார் தந்தை
குமார்  முகுந்தன் வந்ததும்
அனைவரிடமும் நலம் விசாரித்து
விட்டு தாயின் கரங்களால் சாப்பிட
அமர்ந்தான் நண்பனுடன்  தாய் வாணி
உணவு பரிமாறிய வண்ணமே பல விஷயங்களை
பேசினாள் அதனுடன் குமுதினியின் திருமண
விஷயத்தையும் கூறி  உன் பதில் என்னப்பா
என்று மகனை நோக்கினாள் பேசாமல்
சாப்பிட்டு முடிந்ததும்  தன்  தந்தையைப்
பார்த்துக் கேட்டான் ஏன் அப்பா நீங்கள்
மௌனமாக இருப்பது உங்கள் விருப்பம்
என்ன என்று குமார் மகனிடம் கூறினான்
எனக்கும் திருமணம் செய்து வைப்பது சரி
என்றுதான் படுகின்றது  உங்க அம்மா பேசி
முடிக்கட்டுமே என்று அமைதியாக இருந்தேன்
என்றான் மகனிடம் குமார்  ம்  சரிதங்கைக்கு
பிடித்தால் நல்ல இடமாக அமைந்தால்  பேசி
முடிங்க நான் இன்னும் ஆறு மாதங்கள்
சென்றுதான் வருவேன் என்றான் தாயைப்
பார்த்த வாறு அவனுக்குத் தெரியும் இதை
தாய் ஏற்றுக் கொள்ளமாட்டாள் என்று
கடமையின் கட்டுப்பாடு அவன் தலை வணங்கியே
ஆக வேண்டும் பதறிப் போன தாய் வாய்  விட்டே
அழுதாள் ஏண்டா இப்படி செய்கிறாய் மாதம்
ஒரு  தடவை  வருவதையே என்னால் தாங்க
முடியல இதில் ஆறு மாதம் சென்ற பின்னா
என்று மகனின் கரம் பற்றிக் கேட்டாள் ஆம் அம்மா
தலைவர் கட்டளை நான் வேறு ஊர் செல்லவேண்டும்
அங்கு இருந்து வருவது கடினம் ஆறு மாதம் சென்றதும்
இங்கே வந்து விடுவேன் அதனால் திருமணத்தைப்
பேசி முடிங்க திருமண நாள் நான் வந்ததும் நடப்பது
போல் குறித்து எடுங்கள் என்று கூறி தங்கையிடம்
கொஞ்சம் கேலியும் பேசி விட்டுப் புறப்பட்டான்
கலங்கிய கண்ணுடன் வழி அனுப்பி வைத்தனர்
குடும்பமே ஒன்றாக சேர்ந்து

{4}
மகனை அனுப்பி விட்டு தனியே
அடுப்பங்கரையில்  நின்று அழுதாள்
வாணி குமார் அமைதியாக அமர்ந்தான்
நாற்காலியில் குமுதினி தன் அறையின்
உள்ளே சென்று விட்டாள்  வீடே அமைதியாக
இருந்தது நேரம் ஓடி மறைய இரவும்
எட்டிப் பார்த்தது அன்று தூங்கும் போது
குமார் கூறினான்  பக்கத்து ஊர் பையன்
நல்ல உத்தியோகமாம்
அவர்கள் தான் முதல் முறை
நம் குமுதினியை பெண் கேட்டது நாளை
அவர்களிடம் பேசுவோம் அந்த தொலை பேசி எண்ணை
ஞாபகமாக  எடுத்து வை என்று கூறி விட்டு தூங்கத்
தயாரானான்  வாணியின் மனம் தூங்க மறுத்தது
புரண்டு புரண்டு படுத்தவாறே இரவைக் கழித்தாள்
மறு நாள் காலை குமுதினி வேலைக்குச் சென்றாள்
குமார் வழக்கம் போல் நாற்காலியில் அமர்ந்து கொண்டு
பத்திரிக்கையைப் புரட்டிக்கொண்டு இருந்தான்
வாணி வீட்டு வேலையில் மூழ்கிப் போனாள்
சிறுது நேரம் சென்றதும் குமார் வாணியை
அழைத்து தொலைபேசி எண்ணைக் கேட்டு
வாங்கி  தன் மகளை பெண் கேட்ட வீட்டுக்கு
தொடர்பு கொண்டான் அவர்களும் சந்தோசம்
ஒரு நல்ல நாள் பார்த்து விட்டு  வீட்டுக்கு வருவதாக
கூறினர்கள்   நாட்டில் தினம் தினம் வெடி
தினம் தினம் இழப்பு ஆனால் வீட்டை விட்டு
வெளியேறவில்லை இது வரை .நாளும் கடந்தது
மாப்பிள்ளை வீட்டார் வரவுக்கு நாள் குறிக்கப்பட்டது
வண்ணக் கனவில் மிதக்க தயாரானாள் குமுதினி
வீடே குதூகலம் ஆனது சொந்த பந்தம் எல்லோரும்
வந்து மிகவும் சந்தோசமாக வேலைகளை செய்து
கொண்டு இருக்க வாணி மட்டும் இடை இடையே
காணாமல் போவாள் தனிமைில் போய் அழுவதும்
பிறகு வந்து கூடி நின்று சிரிப்பதுமாக இருந்தாள்
மகனுக்காக அழுகை மகளுக்காக சிரிப்பு
இரண்டுக்கும் இடையில் தாயின் தவிப்பு
மாப்பிள்ளை வரும் நேரம் நெருங்க. நெருங்க
குமுதினிக்கு சந்தோசத்துடன் சேர்ந்து
ஒரு தவிப்பு  தோழியர்கள் கூடி நின்று
கேலியும் கிண்டலுமாக இருக்க
அவள் அழகு முகம் சிவக்க வாகனம்
வரும் ஓசை கேட்டு எட்டிப்  பார்த்தனர்
தோழியர் மாப்பிள்ளை வீட்டார் வந்து
விட்டனர் ஒரே பட படப்புடன் அவளும்
ஐன்னல் வழியே பார்த்தாள் அழகான
உடையும் அமைதியான முகமும்  தாயோடு
நடந்து வந்தான் புது மாப்பிள்ளையை வரவேற்றனர்
வீட்டுப் பெரியோர்  சிறுது நேரம்
பேசி முடித்து விட்டு குமுதினியை அழைத்தனர்
அவளும் வெட்கத்தோடு வந்து அமர்ந்தாள்
இருவரிடமும் சம்மதமா என ஒரு முதுமை
தாத்தா வினா எழுப்பவே ஆமாம் என்று
தலையாலே பதில் உரைத்தனர் ஒரு
வழியாக நிச்சயம் முடிந்தது  திருமணம்
ஓராண்டு முடிய என்று முடிவு எடுத்து
மாப்பிள்ளை வீட்டாரும் சந்தோசமாக
போனார்கள்  குமுதினி  அன்று முதல்
ஆரம்பித்தாள் வண்ணக் கனவையும்
கற்பனைக்  கவியையும் தனக்கே உரிமையாக்கி தன் கரம் பிடிக்க
வரும் கணவனை நினைத்து
வடித்தாள் சிறு கவிதை
உறவோடு வந்தாய் உள்ளத்தை
கூடியவர்கள் அறியாமலே
அள்ளிச் சென்றாய் வெள்ளம் போல்
விளையாடுது உன்நினைவு தினமும்
இரவினிலே   தனிமையில் நான்
ஒருத்தி தவிக்கின்றேன் உன்னை நிறுத்தி
கவிதை எழுதி முடிந்ததும் தானாக படித்து
சிரித்தாள்  மனதினிலே

{5}

குமார் குடும்பத்தில் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு  மன நிலையுடன் நாட்களை
கழித்து வந்தனர்  திரு மணத்துக்கு இன்னும்
ஏழு மாதங்கள் இருக்கு முகுந்தன் வீடு வர
இரண்டு மாதம் இருக்கு என்று வாணி
மனதிலே கணக்குப் பார்த்த வண்ணம்
இருந்தாள் வழமை  போல் அன்றும்
பல விசயங்களை  பேசிவிட்டு உறங்கத்
தயாரானார்கள் திடீர் என்று குண்டு
மழை பொழிய ஆரம்பித்தது இவை
ஒன்றும் புதிய ஓசை இல்லை இருந்தும்
அன்று கொஞ்சம் அதிகமாகவே இருந்தது
மக்களின் குரல் ஓசையும் பலமாகவே கேட்டது
வெளியேறிப் பார்க்க பயந்த மூவரும்
பயந்த படியே அறையின் உள்ளே இருந்தனர்
வெடி ஓசையும் செல்லும் மீண்டும் மீண்டும்
பலமாக  வெடிக்கவே குமார் கூறினான்
மகளிடமும் மனைவியிடமும்  நாம் இங்கே
இருக்க வேண்டாம் என்று அழைத்தான்
ஏற்கனவே தயாராக வெட்டி வைத்த குழிக்குள்
சென்று அமரலாம் என்று அதன்படியே
மூன்று பெயரும் ஓடி ஒழிந்தனர்  மெதுவாக குமாரின்
கையைப்  பிடித்துக் கொண்டு சேர்த்தனர்
தாயும் மகளும் பிறகு   ஓசை ஒன்றும்  காதில் விழ
வில்லை ஒன்றும் புரிய வில்லை விடியும்
வரை அமர்ந்து இருந்தனர் விடிந்ததும்
வீட்டுக்குள்ளே குழியில் இருந்து
வெளியேறியவர்களுக்கு பெரும் அதிர்ச்சி
ஆம்  ஊரையே இராணுவம்  கைப்பற்றி
அடித்து  உடைத்து வைத்திருந்தான் தன்
பிடியில் இவர்களையும் சேர்த்துக் கொண்டு
வந்து நிறுத்தினான் மக்களோடு மக்களாக
அமர்ந்தனர் அங்கே பல உறவுகள் கதறுவது
மனதை ஏதோ செய்தது   அன்று இரவு
பொழிந்த குண்டுக்கு உறவை பலி
கொடுத்தவர்களோ கதறி அழுதவண்ணம்
இருந்தனர் இவர்கள் முகத்தைப் பார்த்த
படியே கலங்கி இருக்கும் போது  ஒரு
வாகனத்தில் கொண்டு வந்து கொட்டி
விட்டான் குப்பை போல் அன்று அவன்
துப்பாக்கிக்குப் பலியான மக்களின் உடலைக்
கண்டதுமே எல்லோரும் கதறி அழுதனர்
என் உறவு உன் உறவு என்ற வேற்றுமையே
அப்போது இல்லை  அடித்து அதட்டி அடக்கி
விட்டான் அழுதவர்களை உடலை அவர்கள்
கண் முன்னே ஒரே குழியில் கொட்டி மூடி
விட்டான் அப்போது வாணி இறைவனுக்கு
நன்றி கூறினாள் இறைவா நல்ல வேளை
என் மகன் வேறு ஊர்  சென்று விட்டான்
எனக்கு இது போதும் என்று நன்றி
கூறினாள் மனதிலே
இறைவனுக்கு அப்போது  கடுமையான. குரலில்
அழைத்தான்
ஒரு சிங்கள மிருகம் எல்லோரும் எழுந்து
செல்லவே கொண்டு போட்டான் ஒரு உடைந்த
வீட்டில்  சுத்தியும் மரங்கள் கண் இமைக்கும்
நேரத்திலே கம்பி வேலி போட்டு அடைத்தான்
மிருகம் போல்  குப்பையில் மக்கள் கூட்டம்
உணவு இல்லை நீர் இல்லை  ஒன்றும்
புரியாமலே மக்கள் தவித்தனர்

{6}

இரு தினங்களுக்குப் பிறகு ஏதோ  கொஞ்சம்
உணவு கொடுத்தான் அங்கே வயது வந்த
பெண்கள் படும் அவஸ்தையும்  சிறு மழலைகள்
துடிப்பதையும் பார்த்தால் கல்லும் கண்ணீர்
சிந்தும் இந்த சிங்களவனுக்கு மனம் இரங்கவில்லை
வந்து வந்து  யாராவது ஒருவரின் பெயர்
கூறி விசாரணை என்று ஒரு உறவை அழைப்பான்
சிறுது  நேரத்தில் பாதி உயிருடன் கொண்டு போடுவான்
சிலரை கண்ணிலே காட்ட மாட்டான்  எமனைத்
தவிர வேறு ஒரு தெய்வமும் கண்ணில் தெரிவதாக. இல்லை
அதே போலவே  குமார் குடும்பத்துக்கும்  காத்திருந்தது
கெட்ட நேரம்  கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்
போல் குமாரின் குடும்பம் பற்றி போட்டுக்
கொடுக்கவும் ஒரு எட்டப்பன் இருந்தான் அவனுங்க
கூடவே வேகமாக வந்த அந்த நாய் அழைத்தான்
குமுதினியை கொஞ்சம் பேச வேண்டும் வா என்று
அவள் நடுங்கவே வாணி கதறினாள் குமார்
பதறிப் போனான் நான் வருகிறேன் ஐயா என்றான்
வேண்டாம் நீ நொண்டி நொண்டி வர ஒரு நாளாகும்
போய் பேசாமல் இரு என்று அதட்டினான் வாணி
தான் வருவதாக கூறி எழுந்தாள் ஏய் கிழவி
அடங்கு இல்ல போடுவேன் மண்டையில் என்று
தள்ளி விட்டு குமுதினியை அழைத்துச் சென்றான்
அவள் அழுது கொண்டே பெற்றோரைப் பார்த்தபடி
சென்றாள் கூட்டிப் போய் பல மணி நேரமாகியும்
குமுதினி வரவில்லை வாணி அழைக்காத
தெய்வமே இல்லை  குமார் மெதுவாக  ஊண்டு
காலில் சென்று ஒருவனிடம் விசாரித்தான்
அவன் ஒரு தள்ளு தள்ளி விரட்டி விட்டான்
அழுத கண்ணுடன் வந்து அமர்ந்தான் அன்றுதான்
குமார் அழுவதை வாணி பார்த்தாள் எதையும் தாங்கும்
தன்  கணவனின் கண் கலங்கியதுமே ஏங்கியே
போனாள் வாணி பாதி மூச்சி நின்றது அவளுக்கு
கொஞ்சம் அமைதியாக இருங்கள் வருவாள்
நம் மகள் நாம் யாருக்கு கெடுதல் செய்தோம்
என்று கணவனிடம் ஆறுதல் கூறினாள்
அவள் உள்ளே  செத்துக் கொண்டு இருந்தாள்
மாலையாகிப் போயும்
மகள் வரவில்லை பார்த்த படியே இருக்க  ஒருவன் வந்தான்
இரு ஆண்களை அழைத்துப் போய் வாணியை
தூக்கி கொண்டு போகுமாறு கட்டளை இட்டான்
அவனுங்க பதறும் நெஞ்சை அடைக்கியபடியே
வாரி அள்ளி எடுத்துக் கொண்டு வந்து  படுக்க
வைத்தான் வாடிய கீரையாட்டம் ஒன்றுமே
தெரியாத கிழிசல் துணிபோல் குமிதினியின் நிலமை
ஆம் பாவிங்க அவளை சீரழித்து  கடித்துக் கொதறி  போட்டு விட்டானுங்க
பலர் ரசித்த அழகு மேனியை அலங்கோலமாக்கி
பாதி உயிருடன் அள்ளி க்
கொடுத்திருந்தானுங்க பாவிகள்
உதிர்ந்த ரோஜாபோல் கிடந்தாள் தரையில்
ஓவென்று அழுத வாணியின் குரல்அந்த
நொடியே அடங்கியது மகளின் உயிர்
பிரியும் முன்பே வாணியின் உயிர் அடங்கி
விட்டது வாணியின் அழகு முகம் பார்த்த
ஊர் மக்கள் இந்தக் அவலக்  கோலம் கண்டு கலங்கியவாறு
தங்களின் கூடவே இருக்கும் பருவப் பெண்களின்
மக்களை நினைத்து ஏங்கத் தொடங்கினர்
குமுதினி தந்தை முகம் பார்த்தாள் பேச எத்தனித்தாள்
வார்த்தை வெளியாகவில்லை மூச்சு வெளியாகி
விட்டது ஒரே நாள் ஒரே நேரம் தன்  இரு விழியையும்
இழந்தான் குமார் உயிர் போன கூடாக வெறுமை
யானான்  அவன் தைரியம்  வைராக்கியம் அனைத்தும்
ஓடியே போனது உடைந்த முருங்கை மரமாக
அவன் மனம் இப்போது

{7)
மடி கொடுக்கும் மனைவியும்  இல்லை
தோள் கொடுத்து தூக்க மகன் இல்லை
தூக்கி சாத்த மகள் இல்லை  தான்
அனாதையா ?இல்லை மகன் வருவானா?
என்று தெரியாமலே அகதியாக  வாழ்ந்தான் குமார்
தினம் தினம் அவன் தொலைத்த உயிர்களின்
ஞாபகத்துடன்    குமாரின் உறவினர் சிலர்
அவனைப் பாசமாக  பார்த்து  ஆறுதல் கூறி
துணையாக இருந்தனர் அப்போதுஅவர்கள் எப்படியோ
சிங்கள வெறியனின் கண்ணில் இருந்து
தப்பி அருகில் இருக்கும்  தமிழ் நாட்டுக்கு
ஓடி வந்தனர்  வரும் போது  ஏதேதோ கூறி
கூடவே அழைத்து வந்தனர்   குமாரையும் வரும் போது
குமார் உள்ளம் ஏங்கிய ஏக்கத்தைக் கூற
எவராலும் முடியாது ஓடி ஓடி உழைத்த ஊர்
கூடி வாழ்ந்த நாடு  உயிரில்  கலந்த மனைவி
மகளின் உடல் புதைத்த மண் எந்த ஊரோ
எந்த காடோ இருக்கானா இல்லையா உயிருடன்
தன் மகன் என்று தெரியாத நிலமை இப்படி
பல வேதனையுடன் அடி எடுத்து வைத்தான்
அதற்கும் காரணம் தன் மகனே மகன்
எப்போதாவது வரும் போது தான்
உயிருடன் இருக்க வேண்டும் மகன்
முகம் பார்த்து அவன் கையில் நீர் வாங்கி அருத்திய பின்னரே
உயிர் பிரிய வேண்டும் ஈழத்தின்
மண்ணிலே தன் உடல்  புதைக்க வேண்டும்
தமிழன் நாடு எடுக்க வேண்டும் அதை அவன்
பார்த்த பின்னரே உயிரை விட வேண்டும்
என்று  ஒரு  சிந்தனையும் அ வை நடக்கும் என்ற
நம்பிக்கையிலும்  முள் வேலியை
விட்டு  வெளியேறினான்  ஆனால் ஆண்டுகள்
பல கடந்தன தமிழ் நாட்டிலும் அவன் ஒரு
அகதியாகவே வாழ்ந்தான் மகனும் வர
வில்லை நாடும் கிடைக்கவில்லை  இறுதி
மூச்சும் நிறுத்தப் போகின்றான் இன்றும் வரும்
படகை எதிர் பார்க்கான் மகன் இதிலாவது
வரமாட்டானா என்று மூன்று இனமும் ஒன்றாக
வாழ்ந்த நாட்டில் ஒரு மொழிக்காரனின் ஓர
வஞ்சனையால் எத்தனை நெஞ்சங்கள்  வலில்யின் இன்று
உண்மை பாசங்களை இழந்து உறவுகளையும்
இழந்து  பிறந்த மண்ணையும் இழந்து
விழி  மெது மெதுவாக மூடுகின்றது
மூச்சும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்குகின்றது
ஆனால் அவனின் ஏக்கம் மட்டும் நிலைத்து
நிற்கின்றது நெஞ்சில் இவன் மூச்சு பறக்கும்
ஆத்மா சாந்தி அடையாது என்று
சுத்தி இருந்தவர்களின் குரல் முணுமுணுத்தது
குமார் மூச்சு  முழுமையாக நின்றது விழி
பாதியிலே நின்றது தன் மகனுக்காக வழி
பார்த்த விழி மூடவேயில்லையே
என்று  ஒரு கூட்டம்  நின்று புலம்புகின்றது.

    முற்றும்

கவிக்குயில்  ஆர்  எஸ்  கலா

மலேசியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *