ரா. பார்த்தசாரதி.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

நளினி எப்பொழுதும் எந்தக் கலர் புடவையில்சென்றாளோ அதே கலர் புடவையுடன் திரும்புவாள். எல்லா சேல்ஸ் மேனும் அவள் கையாள். வரும்போது சலவை புடவையுடன் வருவாள் …புதுப் புடவையை எடுப்பாள். அலங்கார அறைக்குள் சென்று உடுத்திய புடவையை அழகாக மடிப்பாள், விலை லேபிளை ஒட்டிவிட்டு, புதுப் புடவையை உடுத்துவாள். அக்கடை ஆட்களை வைத்தே உடுத்தியதை கலைக்கப்பட்ட புடவை குவியலில் கலந்திடுவாள்.. காமேராக்களும் பார்த்துக்கொண்டு இருந்தன.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *