கிரேசி மோகன்
”சிவன்தலை சூடிய சந்திரனை பாம்பு
கவர்ந்திடு மோவாயால் கவ்வி!, -சிவந்ததுமூன்(BLOOD MOON)
போக்கில் தடம்மாற, பூமி புகுந்ததால்
காக்காஊஷ் ஆச்சு கலை’’….

(அல்லது)

‘சிவன்தலை சூடிய சந்திரனை பாம்பு
கவர்ந்திடு மோவாயால் கவ்வி!,-உவந்திடும்,
அஞ்ஞானக் கேள்விக்(கு) அட!பதில் என்னவோ!,
விஞ்ஞானம் விட்ட வழி’’….
’’அகந்தை கிரகணம் ஆன்ம நிலவுள்
புகுந்து பிடிக்கும் பளிச்சை, -உகந்துன்னுள்,
நானார் விசாரிக்க நம்மைவிட்(டு) ஓடும்:
சோணா சலரமணன் சொல்’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *