-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

எத்தனைப் போராட்டம்
எத்தனை இன்னல்
எத்தனை சோகம்                                                kamalini
எத்தனைக் கனவு
எத்தனை வியாதி
எத்தனைச் சோதனை
எத்தனை எத்தனை…
அத்தனையும் வாழும் வாழ்வில்!

உடைந்து நொறுங்கிய கண்ணாடித்துண்டுகளாய்
ஓட்டமுடியாச் சிதறல்கள்!
உள்ளத்தின் உணர்வுகளில்
வாழ்வின் தழும்புகள்!

இதய நாளம்
உயிர்ப் பிரிவின்
சோகத்தில் துடிக்கின்றது!

இதயத்தில் அவள் எண்ணங்களே
நினைத்து நினைத்து அழுது வடிக்கும்
என் மனசு!

மரணம் என்று யார் சொன்னது..?
மரணித்து விட்டார் என்று!

கமலினி அக்கா
ஹயாத்தோடு செல்லுகின்றார்
மறுமை நாளில் எழுப்பப்படுவார்!

நாமின்று உயிரோடு வாழ்கின்றோம்
என்றோ ஓர்நாள் நாம்தான்
மண்ணில் மரணிக்கப்படுவோம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *