கவிதாஞ்சலி.. நாகூர் ஹனீபா அவர்களுக்கு
நாகினி
சிம்ம இசை முரசுக்கேன் உறக்கமின்று
சிந்திய வெங்கல மணியோசை நின்று
சிந்தாமல் சிதறாமல் இசைமுரசு
சிகரத்தின் மூச்சைக் காலன் கவர்ந்தானா!
இஸ்லாத்தின் புகழ் பாடினீரோ
இயக்கத்தின் வழி நின்றீரோ
இயங்கா இதயம் கொண்டி ன்று
இன்ஸா அல்லாவுடன் கலந்தீரோ!
இறைவனிடம் கையேந்துகின்றோம்
இசை சிங்கத்தைத் தந்திடென்று
இரக்கத் துடன் உயிர்ப்பிச்சை கேட்டும்
இறைவன் எடுத்தவுயுர் தருவதற்கிலை என்றானே!
இறைஞ்சும் பிள்ளைகளைத் தவிக்க விட்டேதான்
இவ்வுலகு விட்டு விண்ணு லகில்
இசை அரங்கேற்ற நாள் குறித்த
இறையோன் கைபிடித்துச் சென்றீரே!
சீக்கிரம் விண்ணுலகு விட்டு
சிம்மக்குரல் மீண்டும் பிறப்பெடுப்பதற்கு
சிந்தையில் ஒன்றுபட்டு மத பேதமற்ற
சிவந்த கண்ணீரால் வணங்குகின்றோம்! வாரும் ஐயா!
… நாகினி