தாகூரின் கீதங்கள் -5 உனக்கது வேடிக்கை

0

 

ajay

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 
எப்படி சூனியம் ஆக்குவது

அப்பொருளை ?

இப்படித்தான் அர்த்தம் என்பார் சிலர் !

அப்படி முழுவது மில்லை

என்பாரும் உளர் !

மீண்டும் மீண்டும் வினாவி என்னைச்

சீண்டுவார் அவர் !

வியப்பில்லை உனக்கு அது

வேடிக்கைதான் ! நீ

யாரெனச் சொல் எனக்கு ?

ஒளிந் திருப்பது எங்கு ?

வீணாகத் தேடி உன்னை

விண்டு போனதென் இதயம் !

பயணி தேர்ந் தெடுத்துச் செல்லும்

எந்தப் பாதைக்கும்

இடையூறு எப்போதும் நீ

இழைக்க வேண்டுமோ ?

முடிவாக அடையும்

குடிசை நோக்கிச் செல்லும்

ஊர்ப்புறப் பாதையை

மேற்கொள் வார் குடிசை மக்கள் !

பச்சைப் புல் மேயச் செல்லும்

பசுக்கள் கூட்டம் !

குடத்தில் நீர் கொண்டு வருவார்

நூறு முறை

அதே பாதை வழியாக

குமரிப் பெண்டிர் !

************

Original Source: A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mumbai : 400023

*********************

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *