-வேதா. இலங்காதிலகம்

images

ஆதி மௌரிய குப்த
இராச்சியத்தின் கீழாக இருந்த
இமாலய இராச்சியம் என்ற
நேபாளம் இன்று கிலியுள்!

ஏழை புத்த நாடு
முப்பத்தெட்டு விகித வறுமை
காட்மண்டு தலைநகர் கொண்டு
காத்திரமான பாதிப்பு பூகம்பம்!

பூமிக்கடி அழுத்தம் அதிகரித்துப்
பூமிப் பாளங்கள் அசைவால் (அதிர்வால்)
புவி நடுங்கப் பூகம்பமென்கிறோம்!

மூவித நில நடுக்கம்
சாதாரண முறை, மேற்தள்ளல்
முறை, சமாந்தர அசைவென
மானுட வாழ்வைப் பாதித்து
பல்லுயிர் அழிவுச் சேதமாகிறது.

சாதாரணமாகக் கூறும் பூகம்பம்
பல்லுயிர் காவு கொண்டது
பாரிய சேதம் சோகம்!
பன்னாட்டு உதவிகள் விரைகின்றன
ஓன்பது மாடித் தரஹரா
கோபுரம் ஒன்றுமில்லாது சரிந்தது
சோதனைகள், சோகம் விலகட்டும்
சோதிக்கும்  இயற்கை அமைதியாகட்டும்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *