-மீ.விசுவநாதன்

சந்திரனைக் கொண்டாய் ! நீண்ட
   சடையில் கங்கை வைத்தாய் !
செந்தீயைக் கையில் கொண்டாய் !                 Nataraja-custom
   நீலக் கழுத்தில் நாக
சந்தனத்தைப் பூசி நின்றாய் !
   சத்த உடுக்கை கூட
தந்திரமாய்க் கையில் கூட்டித்
   தாளங் கொட்டு கின்றாய் !            

புயலெனவே சுற்றி நித்தம்
   புதிதாய் ஆடு கின்றாய் !
முயலகனைக் கூடக் காலில்
   முட்டிப் பிடித்தி ருப்பாய் !
நயமுடனே பணிந்து நானும்
   நடரா ஜநுனைக் கேட்பேன்
பயலிவனின் பாப மூட்டைப்
   பந்தை எங்கு வைத்தாய்!          

(அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய், மா, மா, மா, மா, மா )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *