-பா.ராஜசேகர் ​

சிறு உருவம்
சுழலும் விழி
பலம் பெரிது !

காரிருளில்
கண்
மிளிரும்!

சத்தமின்றிக்
கால்
நகரும் !

பசை
அதிகம்
நா நீளும் !

கயமை
நெஞ்சு
நிறம் மாறும்!

பட்சிகள்
எல்லாம்
உணவாகும்!

இது
காலதேவன்
சுழற்சியிலே;

கழுகுக்கும்
பாம்புக்கும்
உணவாகும் !

மனிதரிலும்
இதுபோல ;

உடன் வருவான்
மெல்ல நகர்ந்து
மனம் பிடிப்பான் !

குணமறிந்து
நிறம் கொடுத்து
அவன் மறைவான் !

மாயப் புகழ்
நாப் பசைதடவி
நம்மை
விழுங்கும் வரை !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *