— கவிஞர் காவிரிமைந்தன். 

பாகப்பிரிவினை

தமிழக பாரம்பரியக் கலைகளுள் ஒயிலாட்டமும் ஒன்று. எத்தனையோ கலைகள் அழிந்து வருகின்றன… அவற்றைக் காப்பதும் பராமரிப்பதும் நமது கடமை… இதற்கென உரிய நடவடிக்கைகள் எடுப்பது தமிழக அரசின் முக்கியப் பணிகளில் ஒன்று. நமக்கான அடையாளம்… நம் மண்ணுக்குரிய பெருமை… நம் முன்னோர்களின் தனித்திறம்… நமது கலாச்சார பிம்பங்கள்… இவைகளை விடுத்து தமிழனின் வாழ்வியலை நாளைய தலைமுறைக்கு சொல்லிவிட முடியாது. கலை என்பது மக்கள் வாழ்வில் ஒன்றாகிவிட்ட ஒன்று. இன்று அதன் வடிவங்கள் மாறியிருக்கலாம். ஆனாலும் இன்றைய நவீனங்களுக்கு மூலம் … வித்து… வேர் எல்லாம் நமது பாரம்பரியக் கலைகளே என்பதை மறுக்க முடியாது.

தமிழ் வளர்த்த மதுரையை மையமாக வைத்து இன்று மட்டுமல்ல … அன்று முதல் படங்களும்… பாடல்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. வைகை ஆறும் அதன் வளமும்… மனித வாழ்வின் தொடக்கம் நதிக்கரை நாகரீகங்களே என்கிற அடையாளங்களாய் … ஒரு சமூகப் பின்னணியோடு… சமுதாயப் பிரதிபலிப்புகளை கலை என்கிற ஊடகம்தான் காலங்களைத் தாண்டி இட்டுச் செல்கிறது.

கவிஞர் மருதகாசி எழுதியிருக்கும் இந்தத் திரைப்பாடலில் மண்ணின் மனம் மணக்கும். மாற்றுக்குறையாத தங்கம்போன்ற தமிழர்தம் பெருமைகள் இருக்கும். அவர்தம் வாழ்வியல் எப்படி இருந்தது … அகத்துறை ஆட்சி எப்படி நடந்தது போன்ற சங்கதிகளும் தெரியும். கலை என்பது மக்களிடம் இசையையும் மொழியையும் இணைத்து… நடனமும் கூட்டித் தரும்போது அதை விரும்பாத உள்ளங்கள் ஏது?

பாடலின் தொடக்கத்தைக் கேளுங்கள்… வளம் எப்படி இருந்தது என்று கவிஞர் விளக்கம் தருகிறார்… நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது பாத்திரப்படி ஒரு கையில் ஊனமாக நடிப்பில்… உச்சம் தொட்டிருக்கிறார். அப்படியே ஆடலில் அவர் காட்டியிருக்கும் உற்சாகம் … வியக்க வைக்கும். குழுவினர் கூடி ஆடிப் பாடும் இது போன்ற அனைத்து அம்சங்களும் அமைந்த பாடல் நம் மனதை மறக்க முடியாமல் செய்கிறது.

ஓ..ஓஓஓ..
பாலூற்றி உழவு செய்வார் உழவு செய்வார்
ஆ…ஆ..ஆ.. ஓஓஓ
பனிபோல் விதை நடுவார் விதை நடுவார் ஓ..
ஆ..ஆ… ஓ..ஓ
மாம்பழத்துச் சாறெடுத்து வயலுக்கு உரமிடுவார் உரமிடுவார்
தேன் பாய நெல்விளையும் தென்பாண்டி நாட்டினிலே
ஓ..ஓ….

தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் ஓய்
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்

தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
வண்டு விழியெனும் செண்டைகள் துள்ளிட
தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்

சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

சித்திரை மாதம் முத்துகள் வித்து
திரும்பி இங்கே வருவதென்றே
சென்றவர் இன்னமும் வந்திலர் சேதி
தெரிந்து சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ
ஓ ராமாயம்மா

வித்த இடத்தில பத்தினிப் பொண்ணும்
விரிச்ச வலையில் விழுந்து விட்டார்
உன்னையும் என்னையும் மறந்து விட்டார்
உண்மையைச் சொல்லடி ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா

சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

மஞ்சு விரட்டில் மாடு பிடித்தால்
மாலை சூடி மணப்பதென்று
சொன்னவள் இன்னமும் வந்திலள் நீயும்
தூது சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ
ஓ ராமாயம்மா

கொஞ்சும் கிளிபோல் வஞ்சித்த உன்மேல்
கொள்ளை ஆசை பிறந்திருக்கு
வாசல் கதவு சாத்தியிருக்கு வழியுமில்லை ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா

தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
வண்டுவிழியெனும் செண்டைகள் துள்ளிட

தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ
ஓ…

“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

பாடல்: தேரோடும் எங்க சீரான மதுரையிலே
திரைப்படம்: பாகப்பிரிவினை (1959)
இயற்றியவர்: மருதகாசி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா
காணொளி: https://youtu.be/AGtutIb5JWQ

“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *