வள்ளுவ மாலை
-சுரேஜமீ
திருக்குறள் ஓதுவீர் ஓங்கும் புகழெய்த
ஓடும் மனதிற்குப் போடும் கடிவாளம்
தேடும் அறிவிற்கோர் ஏற்றம் – வருமொரு
தீதும் அகற்றிடும் நூல்!
நூல்பல தேடிப் படித்தாலும் வாரா
தெளிதமிழ் சிந்தனை ஏகும் – திருக்குறள்
வாழ்வில் தரும்நலம் யாவும்! – அதன்வழி
நில் மானுடம் போற்றச் சிறந்து!
வெல்லும் செயல்யாவும் சொல்லும் வழிநிற்க
உள்ளும் புறமும் தீதறுநல் லின்பமும்
மாற்றானும் வாழ்த்திட நாளும் – பெருகிடும்
மாண்பும் திருக்குறள் பண்பு!
நீடில்லா வாழ்சேர் நிலமும் – ஆக்கும்
நிதம்பல செல்வமும் யார்கொண்டு செல்வர்?
தகுமென வாழா மனத்தினன்- தெய்வத்
திருக்குறள் ஓதல் சுகம்!
நானென் செயவென நோகாமல் நாளும்
நவில்வாய்த் திருக்குற ளொன்றை – அதுதரும்
நன்னெறி பற்றிடத் தெருவோர் போற்றும்
நாயகன் நீயாவாய் நம்பு!