என்வீட்டுப் பூனை!
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஒரு பூனை
அடுப்படிச் சாம்பலில்குட்டி போட்டுக்
கதறித் துடிப்பதாகக்
கனவு கண்டு
நித்திரையினைத் தொலைத்தேன்
நிம்மைதியினை இழந்தேன்…!
காக்கா கோழிகளின்
சங்கீத ராகம்
என் காதுகளைக் குடையவே
முற்றத்துப் பக்கம் பாதங்கள்
கோலம் வரைந்தன
கண்கள் நிஜங்களைத்
தேடி அழைந்தன …!
என் ராக் கனவுகள் –
என்னை
ஏமாற்ற வில்லை
துரோகமிழைக்கவுமில்லை…!
சில முக நூல் உறவுகளைப் போல்
மன சந்தோஷத்தால்
என் இதய மலர்
சிரித்துக் கொட்டியது
அழகான குட்டிகளின்
பிறப்பினைக் கண்டு
வருகையைக் கண்டு…!
நீண்ட தொல்லைகளுக்குப்
பின் இன்றுதான்
என் சுவாச மூச்சுக்கு
மன நிம்மதி கிடைத்தது !
இரவு நேர இருளில்
அந்த உடுப்புப் பெட்டிக்குள்
எலிகளின் அட்டகாசமா…?
அல்லது
விளையாட்டு பொம்மைககளின்
குரலோசைகளா…?
அல்லது
உணர்வுகளின் சப்தங்களா…?
உன் சுவாசம்பட்ட
வீட்டுச் சந்துபொந்துகள்
மூலை முடுக்குக்குகள்
சூரியனைக் கண்ட பனிபோல
மாறத் தொடங்கியுள்ளன
உடம்பினைப் போர்த்திய
துண்டினைப் பார்த்து
உன் இதயம் –
அழுது வடிவதேன்..?
அதனால்தான் போலும்
உன் உள்ளத்துக் கதவுகளை
அடிக்கடி மூடித்
திறந்து எனக்குள்
உண்ணாவிரதம்செய்தனவோ?
ஹர்த்தால் ஆர்ப்பாட்டம் புரிந்தனவோ ?
என் ஜீவன் –
எலி, பல்லி, கரப்பத்தான்
நுலும்பு கொசு, எறும்பு
எதுவுமே அற்ற
படுக்கையில் மனநிம்மதி நாடி
உறங்க அழைந்தேன்!
உன் குட்டிகளைக் கண்ட
சின்ன எலிகளெல்லாம்
உன்னைப் போலவே
மரம் விட்டு மரம் தாவும்
மந்திகளைப் போலவே
இடம்மாறித் தடம் மாறிப்போயின
நிலை மாறி..!
சில கனவுகள் பலிக்கும்
நினைவுகள் நிறைவேறும்
என்ற நம்பிக்கைகள்
எனக்குள் வாழ்கின்றன
என் எதிர்பார்ப்புகளின் இலட்சியங்களில்
ஆரம்பமாகும்
திசைகாட்டும் கப்பலைப்போல்
என் வீட்டுப் பூனைகளும் …!