உங்களுக்கு உறுதுணையாக ஒரு யோக நூல்

கவியோகி வேதம்

yoga

            ,’யோகம்’-என்பது ஒரு பரவச நிலை.!யோகம் என்பது ஒரு வைகறைக்குளிர்ச்சி!சூரிய ஒளியில் குளிக்கும் காலைப் பறவைகளின் சிறகு விரிந்தநிலை!ஆம்! பூமியை உதைத்து வேகம் எடுக்கும் அதிர்ஷ்ட விமான நிலையே யோகம்.பிரபஞ்சத்தை விழுங்கிக் கொண்டே இங்கேயே சொர்க்கம்காணும் ஆநந்த ஆவிநிலையும் யோகம்தான். புரிகிறதா? யோகம் சித்தியானபிறகு உங்கள் உள்ளே ஸ்புரிக்கும் .கள்ளினும் செம்மாந்த நிலை அது!.கவிதையுள் முக்குளிக்கும் விதிர்விதிர்க்கும் களிப்பு நிலை அது!

                பேரானந்தச் சொட்டு உங்கள் மூளைக்குள் விழுந்தால் நீங்களும் யோகத்தில் நீந்தலாம்! புதிய அமுதம் மாந்தலாம்! பிறர்க்கும் உதவலாம்.எந்த நோயையும் நீங்களே தீர்க்கலாம்.சித்திகளை ஏந்தலாம்!ஏன்?..தெய்வீகத் தன்மையைஉங்கள் கண்ணுக்குள், நரம்புக்குள்,ஏன்? உடலுக்குள்ளேயே அருந்தலாம்!புரிகிறதா? இதுதான் யோகம். இவ்வளவுதான் யோகம்!

               ..கடினமே இல்லை.முயன்று முயன்று அந்தப் பரவசத்தில் முங்கத் தயாராகுங்கள்!  என்ன!உங்களுக்கு அந்த யோக வழியைக்காட்ட  ஒருநல்ல ஆசான் தான் தேவை. முயலுங்கள். தினசரி உங்களுக்குத் தெரிந்த மூச்சுப்பயிற்சி, அல்லது காயத்ரியுடன் சேர்ந்து கனிந்த பிராணாயாமம் ஒரு முப்பது எண்ணம் செய்து பாருங்களேன்! அட்டகாசமான ஒருமைப்பாடுதான் இதற்கு முக்கியத் தேவை.. கொஞ்சம் யோகாசனமும் செய்யுங்கள். அது உங்கள் நரம்புகளை ஒரு யோக நிலைக்குத் தயார்ப்படுத்தும். உடம்பும் உஷ்னம் ஆகாது. அதற்காகக் கன்னாபின்னா என்று செய்யாதீர்கள். காஞ்சி மகா முனிவரே , ‘அட! யோகமா? செய்வீர்! ஆயின் ஒரு குருவைக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டு அவர் மூலமே தினசரி அவர் சொல்படி நிதானமாகச் செய்வீர் , உடல் உஷ்ணம் ஆகாதபடி..’என உபதேசித்திருக்கின்றார்.

  உதாரணத்திற்கு, இந்த யோகம்திருவல்லிக்கேணியில்  1960களில்  வசித்த ‘சித்தேஸ்வர்’ என்னும் ,யோகிக்கு எளிதில் கைவந்தது. அவர் குரு மூலமாக.

 தீவிரமாக அவர் முதலில் நம் பிள்ளையாரைத்தான் தீவிரமாக உபாசனை செய்தார். அந்த தும்பிக்கைக் கடவுள் ஆச்சர்யமாக அவரது யோக உடலுக்குள் புகுந்துகொண்டு நான் சொன்னபடி எழுது ‘உலக மக்களுக்காக  யோகப்பயிற்சிகளின் மொத்த வடிவையும், செய்முறைகளையும் உனக்குத் தொகுத்துத் தருகின்றேன் ‘ என்று சொல்லி அவரை நடுராத்திரியில் எழுப்பி எழுத  வைத்தார் .. முதலில் அந்த யோகப் பெருங்கனலின் துளி வீச்சை உள் வாங்கிக் கொண்டார்இந்த ஞானி.,..இந்தத் திருவல்லிக்கேணி யோகி!.

தான் அடைந்த பெரும் சொத்தைத்,தான் எவ்வாறு தன் புத்தியில் தேக்கி,உடம்பில் உருவேற்றிப் ‘பூரணநிலை’தனை அடைந்தாரோ,அந்த ஞானக்கல்வியைப்பிறர்க்கும் உபதேசிக்கத் துணிந்தார் தன் அற்புதச்சீடர் “விஜயகுமார்’ மூலமாக!

              ..மனிதனின் நிலை எவ்வாறு யோகம் மூலம்(தொடர்ந்து பயிற்சி பெற்றால்)படிப்படியாக தெய்வ நிலை அடைகிறது என்பதைத் தன் அனுபவம் வழியே சொற்களாக,புரிகிற சிறு சிறு பூங்காப் பாதையாக விவரிக்கிறார் சுவாமி, யோகிசித்தேஸ்வரர் ‘ யோகமும் மனிதனின் நிலையும்’ என்ற  ஒரு புத்தகம் மூலம்..இது திருவல்லிக்கேணியில் உள்ள எல்லா புத்தகக் கடையிலும் கிடைக்கும்.

              ..தன் குரு சொன்னதை அவ்வப்போது உரைகளாகத் தொகுத்து,தெளிவான தலைப்புகளாகப் பிரித்து நமக்குத் தருகிறார்  அவர். நடை கொஞ்சம்  எளிமையும் கடினமும்(சம்ஸ்க்ருத) கலந்து இருந்தாலும் யான் சொன்னதுபோல் நிச்சயம் நாமும் யோகம் பயில வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு, தினசரி சாதனை செய்பவர்க்கு இந்நூல்  பயன்படும். .

              ..யோகத்தின் அடிப்படைத் தத்துவம் என்ன?தேகத்தின் உணர்வுத் தத்துவம் எப்படி மேன்மேல் யோகத்தின் பிடிக்குள் அகப்படுகிறது,பரவச நிலையில் “உள் ஆழ்ந்த மனித மூளை எவ்வாறு செயல்படுகிறது?எப்படி “சித்திகளை’  விளைவிக்க முனைகிறது,ஒவ்வொரு சொல்லும் எவ்வாறு “அருள்வாக்காக” மாறுகிறது,அதன்மூலம் கைவரப்பெற்ற உள்ளங்கையின் ஆன்மசக்தி எவ்வாறு பிறமாந்தரின் எல்லா நோய்களையும் தீர்க்கவல்லதாக மாறுகிறது என்றெல்லாம் படிப்படியாக,அழகாக,தெளிவாக  இந்த நூல் மூலம் நீங்கள் அறியலாம்..வாழ்க இந்த அற்புத யோக நூல்!.

 உங்களுக்கு ஒரு நல்ல குரு கிட்டினாலும், அவர் தனது ஆன்மிக சக்திகளை உங்கள் உள்ளே பாய்ச்சி உங்களை யோகத்துக்குத் தயார் படுத்தினாலும் படித்து அறிய, சாதனை செய்ய உறுதுணையாக ஒரு யோக நூல் தேவை என்பதற்காக இந்த ரகசியம் சொன்னேன். நிச்சயம் இதைப்  படிக்கவும். யோகத்திற்கும் தியானத்திற்கும் தயார் ஆகுங்கள்.

 தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *