-வேதா. இலங்காதிலகம்

நாலடியார்

அதிகாரம் 25 –  அறிவுடைமை

நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்      naladiyar
கணிகல மாவ தடக்கம்– பணிவில்சீர்
மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
கோத்திரங் கூறப் படும்.

 நளி – பெரிய,  கடல் – கடலின், தண் – குளிர்ந்த, சேர்ப்ப – கரையுடைய அரசனே  நல் கூர்ந்த – வறுமையடைந்த,  மக்கட்கு – மனிதர்க்கு, அணிகலமாவது – அணிதற்குரிய ஆபரணமாவது, அடக்கம் – அடங்கியிருத்தல், பணிவுஇல் – அடக்கமில்லாத, சீர் – தன்மையில், மாத்திரையின்றி – அளவு இன்றி வரம்பு கடந்து நடக்குமேல் – ஒழுகுவானாகில்,  வாழும் . அத்தகையவன் வாழும் ஊர் – ஊரினரால், கோத்திரம் – தன் குலம், கூறப்படும் – இழிந்து சொல்லப்படும்.  என்றவாறு…

என் வரிகள்:

மகா சமுத்திரத்தின் தண்மை
மணற்தரையின் அதிபதியாம் மன்னனே!
கீழ்ப்படியும் குணம் பொருளில்
கீழ்நிலையாளரை வடிவாக்கும் நகை
கீழ்ப்படிதலற்று எல்லையின்றி மனிதன்
இயங்கினால் தன் சொந்தக்
குடியாளராலேயே இவன் குலம்
இழித்துக் கூறும் நிலையடையும்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *