-ராதா மரியரத்தினம்

எம் பேரு நெனவில்ல​
ஊரு நெனவில்ல
தேரடி வீதியில் நின்ற​ என்னைப்               amma
யார் பெத்த பிள்ளையோ
தெம்பாக் கைபிடித்துக் கூட்டி வந்து
காப்பகத்தில் சேர்த்து விட்டான்!
அந்தப் பிள்ளை முகம் தேடுகிறேன்
அதுவும் மறந்து போச்சு!

உண்ண​ உந்துதல் இல்ல​
உவப்பா சமைப்பாரும் யாருமில்ல​
செத்த​  நாக்குக்குச்
சுவையென்ன​ ஒரு கேடா?
பொத்தி வளர்த்தேனே
பொசுங்காம​ வெய்யிலில​
சக்தியெல்லாம் திரட்டி
உழைப்பையும் தந்தேனே!

அப்பன் இல்லாப் பிள்ளையின்னு
அடுத்தவர் சொல்லாம​
அடுக்கடுக்காய்ப் படிக்க​ வைச்சேன்
ஆளாக்கிப் பாத்துப்புட்டேன்
ஒம் முகமும் ஒம் பேரும்
நல்லா நெனவிருக்கு
என் பேரன் முகம் பார்க்க​
ஆசை கோடி இருக்கு!

கண்ணை மூடினாலும்
ஒன் நினைப்பு கொல்லுதய்யா நீ
தும்மையிலே என்றாலும்
இந்த​ ஆத்தா ஞாபகம் வரலையா?
பாத்து நடந்துக்கப்பா!
ஆத்தா கட்டை வேகிறப்போ
கொள்ளிப் போடவேனும் வருவியா?

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அம்மா!

  1. மீண்டும் என் ஆத்மார்த்தமான​ நன்றியறிதலை வல்லமை நிர்வாகக் குழுவிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *