தாகூரின் கீதங்கள் -6
உனக்கது வேடிக்கை
மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
எப்படி சூனியம் ஆக்குவது
அப்பொருளை ?
இப்படித்தான் அர்த்தம் என்பார் சிலர் !
அப்படி முழுவது மில்லை
என்பாரும் உளர் !
மீண்டும் மீண்டும் வினாவி என்னைச்
சீண்டுவார் அவர் !
வியப்பில்லை உனக்கு அது
வேடிக்கைதான் ! நீ
யாரெனச் சொல் எனக்கு ?
ஒளிந் திருப்பது எங்கு ?
வீணாகத் தேடி உன்னை
விண்டு போனதென் இதயம் !
பயணி தேர்ந் தெடுத்துச் செல்லும்
எந்தப் பாதைக்கும்
இடையூறு எப்போதும் நீ
இழைக்க வேண்டுமோ ?
முடிவாக அடையும்
குடிசை நோக்கிச் செல்லும்
ஊர்ப்புறப் பாதையை
மேற்கொள் வார் குடிசை மக்கள் !
பச்சைப் புல் மேயச் செல்லும்
பசுக்கள் கூட்டம் !
குடத்தில் நீர் கொண்டு வருவார்
நூறு முறை
அதே பாதை வழியாக
குமரிப் பெண்டிர் !
************
Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mumbai : 400023
*********************