-இரா.சந்தோஷ் குமார், திருப்பூர்

இறுதியாக
உனக்கும் எனக்கும்
எதுவுமில்லையென்று
நீ முடிவெடுத்துத்
தனிமைத்தீவினில்
எனை  விட்டுவிட்டுச்
சென்றாலும்
இந்த யுகத்தின்
மிகச்சிறந்த உனது
புன்னகைப்பூவொன்றினை
எந்தன் வாலிப தேசத்தில்
நட்டுவிட்டுச்செல் தோழி!

நாளைய எனது
முதுமைக் குருதிச்செல்கள்
உந்தன் புன்னகைப்பூ
சுவாசத்தினால்கூட
உயிர்ப்பித்து
உயிர்ப்பித்து
மெய்ப்பிக்கலாம்
அந்த ஆழியின் ஆழத்திலிருக்கும்
முத்துப்போன்ற
உன் மீதான
எனது ஆழக்காதலை!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *