-பா.ராஜசேகர்

செடிகொடிகள்
பசி கொண்டு
வான் நோக்கும் !

மேகங்கள்
கலந்தாடிக்
கருத்தரிக்கும் !

கருமேகங்கள்
மனமுருகி
மழை பொழியும் !

மண் குளிரும்
வளம் கொழிக்கும் !

மகரந்தம்
மலர்தாவும்
கனி பிறக்கும் !

இறக்கை
சிறகடிக்கப்
பறவைகள் பசியாறும் !

இயற்கையின்
இலக்கணமே
மிக நெருக்கம் !

மனமுருக்கம்
ஒன்றேதான்
மாற்றும் என்பேன் !

சுழலுகின்ற
உலகுக்கும்
மனமிருக்கு !

கனிந்த மனம்
வாழ்வியலைச்
சிறப்பாக்கும் !

வாழ்க்கைக்கு
அர்த்தத்தை
உருவாக்கும் !

வாழ்கின்ற
காலம் மிக
கொஞ்சமையா !

வாழ்த்துகின்ற
உள்ளங்களில்
துஞ்சுமையா !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *