வள்ளுவ மாலை
-சுரேஜமீ
திருக்குறள் நீதிவழி வாழ்வில் நடைபோட
போர்க்குரலும் வாராது பொய்யிலை – மேதினியில்
யாவரும் மாறிட வகுக்கும் வள்ளுவம்
போற்றி வரும்நாள் வெல்!
தன்னிலை தானுணர் தூயநல் வாழ்வுணர்
எந்நிலை வந்திடினும் ஏற்றமும் காண்பரே
சொல்நிலை வள்ளுவம் ஏகிட – மேதினியில்
கோள்நிலை வாய்க்கும் அறிவு!
இல்வாழ்க்கைப் பேறுடைத்து ஊர்போற்றச் சீருடைத்து
சொல்லென்றும் மென்மையாய்த் தித்திக்கும் – வாழ்வில்
திருக்குறள் பற்றிட நல்லறம் சேர்ந்து
செறிவோடு மண்ணில் வர!
திடமான எண்ணமும் சேரிடத் தேற்றமும்
தேடிய வாழ்வும் சுகம்தரும் – கற்றுணர்
வள்ளுவம் சொல்நெறி ஏகிட நற்றமிழ்
தெள்ளின் திறனாகிச் சூழ்!
வருமவர் நானறியார் வள்ளுவம் தானறிவார்
வாழ்க்கைப் பயனதுவே சேர்த்திடல் யாவர்க்கும்
வானுயர மூத்தோர் மொழிதந்த தேவநூல்
மானுடம் பற்றிடச் சுகம்!