ஆசிரியர் பாடல்
வீ.கே.கார்த்திகேயன்
பாடு பாடு தம்பி பாடு
பாடம் சொல்லி, படிக்கச் சொல்லி
அறிவைத் தரும் ஆசிரியரைப்
பாடு தம்பி பாடு.. (பாடு)
கைப்பிடித்து எழுத வைத்தாரு
கையெழுத்து அழகாச் செய்தாரு
பாட்டாய்ப் பாடம் படிப்பாரு
எனக்குப் பிடித்த வாத்தியாரு.. (பாடு)
சொல்வதை அழகாய்ச்
சுருக்கமாச் சொல்வாரு
சொன்னது நினைவிலே தங்க
கதையோடு சேர்த்துத்தான் சொல்வாரு.. (பாடு)
உலகத்தைக் கட்டி
உண்மைகள் பல சொன்னாரு
கண்ணை மூடச் சொல்லி
காசியும் ராமேசுவரமும் கூட்டிப் போவாரு.. (பாடு)
எங்களோடு தான்
சேர்ந்தே இருப்பாரு
கை கொடுத்து எங்களை
உயர்த்தி விடுவாரு..
கற்பகத் தருதான் அவரு
காமதேனு பசுதான் அவரு
வாழ்ந்து காட்டும் அவரே
எங்கள் வாத்தியாரு..
.. உங்கள் வாத்தியாரு..
– வீ.கே.கார்த்திகேயன்
தமிழாசிரியர்
சச்சிதானந்த ஜோதி நிகேதன்
கல்லாறு, மேட்டுப்பாளையம்
உங்கள் பாடலை உங்கள் அனுமதியின்றி ஆசிரியர் தினத்துக்காக எங்கள் பள்ளி மாணவர்களுக்காகப் பயிற்றுவித்தேன் சிறு மாற்றங்களுடன்..அது இவ்வளவு பிரபலமடையும் என்று நினைக்கவேயில்லை..3000 பேருக்கும் மேற்பட்டோர் YOUTUBEல் அப்பாடலைப் பார்த்துள்ளனர்..நன்றி ஐயா தங்களின் பாடலுக்கு..