-ரா. பார்த்தசாரதி 

முதுமை என்பதே மனிதனின் அனுபவ முதிர்ச்சி
உடலும் உள்ளமும் சற்றே  அடையும் தளர்ச்சி
துணை  தடுமாறினாலும் மனம் கொள்ளும் எழுச்சி
வீ ழ்ந்தாலும்  கைகொடுத்துத் தூக்கிவிடும் முயற்சி!

அனுபவத்திற்கும் வயதிற்கும் மதிப்பு  இல்லை
பெற்றதும்  உடன்பிறந்ததும் உதவ நினைப்பதில்லை
ஏனோ கடனுக்காக  உதவும் நிலைமை  இங்கே
உள்ளத்தில் கலங்கும் முதுமைக்கு நிம்மதி எங்கே?

அடிபட்டு இடம் தேடித் தட்டுத்தடுமாறும் நெஞ்சங்கள்
பாசத்தினால் விடுபட முடியாத  முதியோரின்  எண்ணங்கள்
இளம் ஜோடிகள் போல் காதலும் காமமும்  இல்லை
முதிர்ந்த காதல்தான் ஆனால்  காமம் இங்கில்லை!

முதுமைக் காதல் என்பது தாஜ்மஹாலின்  நினைவு
இளமைக் காதல் என்பது மனக் கோட்டையின் வளைவு
இன்றுமுதுமையின் அடைக்கலம் முதியோர் இல்லங்கள்
இதனை மாற்றாதோ  இளமையின்  எண்ணங்கள்?

தனக்காக  வாழாது  பிறருக்காக வாழும்  முதுமை
என்றும் உறவுக்கும் பாசத்திற்கும் ஏங்கும் தனிமை
இளமையின்  முதிர்ச்சியே  மனித இனத்தின்  முதுமை
தன் வினை தன்னைச் சுடும் என்பதுதான் பொதுவுடைமை!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *