-பா.ராஜசேகர்

அன்பும்
பண்பும்
பாசம் தரும் !

உண்மையும்
உழைப்பும்
ஊக்கம் தரும் !

கல்விச்
செல்வமே
புகழைத்தரும் !

கருமை
மேகமே
மழையைத் தரும்!

காதலில்
தூய்மை
மேன்மை பெறும் !

மழலைச்
செல்வமே
மகிழ்வைத் தரும்!

ஒவ்வொரு
இரவும்
பகலைத் தரும் !

ஒளிகண்ட
நிலவே
வெளிச்சம் தரும் !

நல்நிலம் கண்ட
முளையே
விளைச்சல் தரும் !

தொய்வில்லா
முயற்சியே
வெற்றியைத் தரும்!

மாற்றத்தில்
நன்றே
சிறப்பைப் பெறும்!

துன்பத்தின்
பின் இன்பமே
இனிமை தரும் !

கருணை
மனமே
இறையருள் பெறும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *