-கனவு திறவோன்

நான் சாதித்த போது
எல்லோரும் தட்டினார்கள்…
பலர் கையைச்
சிலர் என் முதுகைச்
சிலர் என் தோளை !

எல்லோரும் தட்டினார்கள்
சத்தமாய்…
நீ மட்டும் கடைசி வரைத் தட்டவேயில்லை..!

சத்தம் அடங்கியதும்
நீ மெலிதாய்ப் புன்னகைத்தாய்
அந்தக் கள்ளச் சிரிப்பின்
அர்த்தம்
விலை
எனக்கு மட்டும் தானே தெரியும்…!

எல்லோரும்
நான் சாதித்ததற்காகத் தட்டினார்கள்
நான் சாதித்ததே
உன் இதயக் கதவைத் தட்டத்தான்
என்பதறிந்துதானே
நீ சிரித்தாய்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *